Monday, December 13, 2010

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-9


கல்லூரியின் இறுதி நாட்கள்.

பிரியப்போகிற வருத்தம் எல்லோர் மனதிலும் அடர்ந்து கிடந்தது. இறுதி தேர்வினை முடித்து விட்டு விடைபெறும் தருவாயும் வந்தது. கல்லூரியில் நாங்கள் திரிந்த அத்தனை இடங்களுக்கும் போய் பார்த்துக்கொண்டிருந்தோம் நானும், அருணும், சந்தியாவும்.

நாங்கள் வழக்கமாக விளையாடும் basket ball court ல் நாங்கள் மூவரும் அமர்ந்திருந்தோம். பேச எங்களுக்கு வார்த்தைகள் இல்லாமல் தடுமாறிக்கொண்டு இருந்தோம். என் உயிரான இருவரும் என் இருபுறமும் அமர்ந்திருக்க, இதுபோன்று ஒரு சந்தர்ப்பம் மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற எண்ணம் என்னை வாட்டி எடுத்த வேளையில், சந்தியா அருணை பார்த்து "அடுத்து உன் plan என்ன அருண்?" என்றாள். பழைய இனிமையான நாட்களை அசை போட்டுக்கொண்டிருந்த அருண், சந்தியாவை பார்த்து "Pilot training போகணும். அப்பா application வாங்கி வெச்சிருக்கார். சென்னை ல தான் training. 8 மாசம். அப்பறம் ஒரு exam எழுதனும். Exam marks அ பொருத்து zone allocate பண்ணுவாங்க. 2 வருசத்துல co-pilot chance கிடைக்கும். அப்புறம் என்ன life settle தான். நீ MBA apply பண்ணிட்டியா சந்தியா?" என்றான்.

"ம்..... நானும் சென்னை ல தான் 3 college ல apply பண்ணியிருக்கேன். அப்பா அங்கயே இருக்க சொல்லிட்டார். நீ என்ன பண்ணபோற கிருஷ்ணா!! உன்ன பிரிஞ்சு நான் எப்படி இருக்கப்போறேன்னு எனக்கே தெரியல" என்ற சந்தியா அருண் இருப்பதை உணர்ந்து, "உங்க எல்லாரையும் miss பண்ண போறேன்" என்றவள் முகம் வாடிப்போனது. அருண் என் காதோரம் வந்து "பாரு டா.. உன் மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்கா... நிச்சயம் அவ உன்ன காதலிக்கறா" என்றான். அருண் என்ன கூறினான் என்று சந்தியா என்னிடம் கேட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் ஜான் சார் அங்கு வந்தார்.

"கிருஷ்ணா, உன்ன எங்கெல்லாம் தேடுறது....!! உன் கனவு நிறைவேற போகுது. NASA இந்த வருஷம் இந்தியா ல இருந்து 35 junior designers அ recruit பண்ண போறாங்க செப்டம்பர் கடைசி ல. டிசம்பர் ல joining. காலேஜ் க்கு invitation வந்திருக்கு best students அ அனுப்ப சொல்லி. உன்ன principal லே refer பண்றேன்னு சொல்லிருக்கார்."

எங்கள் அனைவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. அருண் ஜான் சார் ஐ பார்த்து "எங்க சார் interview?" என்றான் மிகுந்த ஆர்வத்துடன். "சென்னை ல ஒரு star ஹோட்டல் ல நடக்க போகுது. ஹோட்டல் பெயர் ஞாபகம் இல்ல. நீ என்கூட வா. Circular அ தரேன். photocopy எடுத்துட்டு திருப்பி குடு." என்றார் ஜான் சார். என்னை விட சந்தியவிற்க்கும், அருணுக்கும் அதிக மகிழ்ச்சி. அருண் என்னை பார்த்து "டேய் மச்சான்..!! நீங்க 2 பேரும் இங்கயே இருங்க. நான் சார் கூட போய் notice அ வாங்கிட்டு வரேன். நீங்க முக்கியமா எதாச்சும் பேசணும்னா பேசுங்க. நான் சீக்கிரம் போயிட்டு லேட் அ வரேன்" என்றான் என்னை பார்த்து கண் அடித்து, தலையை ஆட்டி.

எங்களுக்கு தனிமை கிடைத்தது. இருந்தபோதும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சந்தியாவின் கால்கள் அருகே சில சொட்டு நீர் துளிகள் விழுந்து கொண்டிருப்பதை கண்ட நான் சட்டென்று சந்தியாவின் முகத்தை பார்த்தேன். அவள் கண்கள் குளமாகி இருந்தது. "என்ன சந்தியா... ஏன் அழற" என்றேன் தயங்கியபடியே.

"கஷ்டமா இருக்கு கிருஷ்ணா. இந்த 4 வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. எப்பவும் நீ என்கூடவே தான் இருந்திருக்க. இனி நீ இல்லாம எப்படி life இருக்கும்னு நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. அழுகை ய அடக்கவே முடியல. உனக்கு முன்னாடி அழக்கூடாது னு நெனச்சு தான் வந்தேன். ஆனா........." என்றவள் கண்களில் கண்ணீர் பெருகிக்கொண்டே போக, அவள் என் கையை பற்றிக்கொண்டாள். அவளது ஸ்பரிசம் என்னையும் சற்று கலங்க தான் வைத்தது. நான் அதை காட்டிக்கொள்ளாமல் "NASA interview சென்னை ல தான. அதுவரைக்கும் நான் அங்க தான் இருபேன். உன்ன அடிக்கடி வந்து பாக்கறேன்." என்று ஆறுதல் கூறினேன்.

"ம்....... அது OK. ஆனா........" என்று இழுத்த சந்தியா "டிசம்பர் ல என்ன விட்டுட்டு நீ NASA போய்டுவ. நான் என்ன பண்றது அப்ப." என்ற அவளது விழிகளில் ஒரு ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு இருப்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. "சரி. நீயும் வா என்கூட. நான் உனக்கு visa எடுக்குறேன்." என்று கூறியது தான் தாமதம். கலங்கிய விழிகளும், புன்னகைத்த உதடுகளுமாய் கேட்டாள் சந்தியா "என்ன visa எனக்கு எடுப்ப???" என்று. வார்த்தை இன்றி தவித்துக்கொண்டிருந்த என்னை பார்த்து சந்தியா "எனக்கு dependant visa எடுத்து தரியா??" என்றாள் மிக மெல்லிய குரலில். மறைமுகமாக தன் காதலை சந்தியா சொல்லுவது எனக்கு பரவசத்தை கொடுத்தாலும், பயமும் குழப்பமும் என்னை சுழற்றி அடித்துக்கொண்டிருந்த வேளையில், என் தயக்கத்தை உணர்ந்த சந்தியா "கடைசியா என்னையே சொல்ல வெச்சிட்ட..!! சரி நமக்குள்ள என்ன...
I LOVE U KRISHNA.
நீ இல்லாம இனி எனக்கு வாழ்க்கை இல்ல"
என்று கூறி என் தோளில் சாய்ந்தாள்.


தொடரும் காதல் பரிமாற்றம்......

என்றும் அன்புடன்,
இராஜராஜன்

No comments:

Post a Comment