Sunday, March 6, 2011

ஒரு தந்தையின் தாலாட்டு (ஒரு கணவனின் ஒப்பாரி)

ஒரு தந்தையின் தாலாட்டு (ஒரு கணவனின் ஒப்பாரி)

பத்திரமா பாத்துக்கனு
பெத்த மகன் தூங்கயிலே,
சத்தியத்த வாங்கிகிட்டு
போனதெங்க மரிகொழுந்தே??

கை புடிச்ச நாள் முதலா
கை நீட்டி அடிச்சேனா??
கண்மணியே உன்னத்தான்
கண்கலங்க வெச்சேனா??
நட்ட நாடு வீதியிலே - என்ன
மொட்ட மரமாக்கிப்புட்டு,
கட்டழகி காத்தோட
கலந்துத்தான் போனதெங்க??


காசு பணம் கேட்டுத்தான்
கல்யாணம் பண்ணேனா??
சொத்தெழுதி வைக்க சொல்லி
சண்டை தான் போட்டேனா??

அத்தமக உன்ன கட்ட
ஒத்தக்காலில் நின்ன என்ன,
ஒத்தயில விட்டுப்புட்டு
போனதெங்க சென்பகமே??


வெட்டருவா தூக்கிகிட்டு
வெட்டிவம்பு தேடயிலே,
கெட்டதெல்லாம் விட்டுவிட
வேணுமுன்னு சொன்னவளே,
விட்டுப்புட்டு நான் நிக்க - நீ
என்ன விட்டு போனதெங்க??


சொந்தபந்தம் சேர்ந்து வந்து
சேத்து வெச்ச சாயங்காலம்,
சத்தியமா சாகும் வரை
'உன்கூடதான்' னு சொன்னவளே,
அத 'உண்மை' னு காட்டிப்புட்டு
போனதெங்க கருவாச்சியே??


எத்தன நாள் தவமிருந்த
ஒத்த புள்ள 'வேணும்' னு,
நீ பெத்த புள்ள இங்கிருக்க
பெத்தவளே நீ எங்க??

நித்தமெல்லாம் ஆசையோட,
நெஞ்சமெல்லாம் பாசத்தோட,
நீ நட்ட மரம் பூத்திருக்க,
நட்டவளே நீ எங்க??


பட்ட பகல் மொத்தமும்
பாடுபட்ட வேளையிலும்,
கட்டழகி உன் நெனப்பால்
சூரியனும் சுட்டதில்ல..!!
என்ன ஒத்தையில விட்டுபுட்டு - நீ
நித்திரைக்கு போனபின்னே,
நட்டநடு ராத்திரியும்
சுட்டெறிக்குது மனசுக்குள்ள..!!


திருடித்தான் பொழச்சேனா
தடுமாறிப் போனேனே..!!
அடிச்சித்தான் பொழச்சேனா
ஆடிப்போய் நிக்கிறேனே..!!
ஊர் பசி ஆத்தத்தான்
விவசாயம் பாத்தேனே,
வளமும் சேரவில்ல..!!
வாழ்வும் செழிக்கவில்ல..!!


ஏன் இந்த 'ஜென்மம்' னு
ஆத்தோர அய்யனார,
பாத்ததுமே கேட்டுப்புட்டேன்,
காத்திருந்தும் பாத்துப்புட்டேன்,
பதிலும் கெடைக்கவில்ல..!!
வலியும் கொறையவில்ல..!!


மகனே..!!
என் செல்ல மகனே..!!
உலகாளப் பிறந்தவனே..!!
சீக்கிரமே தூங்கிவிடு..!!


நான் பெத்த மகராசா,
எனக்கு வாழப்புடிக்கலடா..!!


உன் தொந்தரவு இல்லைனா,
உன் தாயைப் போய் சேர்ந்திருப்பேன்..!!
அவ போன இடம் தெரிஞ்சிருந்தும் - நான்
போக வழி கெடைக்கலயே..!!


இத சொல்லி நான் அழுதா
உனக்கு தான் புரிஞ்சிடுமா??
எதுக்கு நீ 'அழுர' னு - நான்
சொல்லி தான் தெரியனுமா??


- கண்ணீர் துளிகளுடன்,
உன் அதிர்ஷ்ட்டமில்லா தந்தை.



என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Sunday, February 20, 2011

ஒரு லட்சியவாதியின் காதல் கதை - அத்யாயம்-13

ஆட்டோவில் ஏறியதும் சந்தியாவிற்கு போன் செய்ய, அவளோ "கிருஷ்ணா... இப்ப தான் உனக்காக கோவிலுக்கு போய் வேண்டிட்டு வந்தேன். எல்லாம் நல்லபடியா நடக்கும். உனக்கு தான் Interview, ஆனா நான் தான் ரொம்ப டென்ஷன் அ இருக்கேன். Evening காலேஜ் முடிஞ்சதும் நான் பீச்சுக்கு வறேன். சண்டே மீட் பண்ண அதே இடத்துக்கு வா. ஓகே???? குட் லக் கிருஷ்ணா.."

"Thank You சந்தியா..." என்று சொல்லி போனை பைக்குள் வைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அருகில் வந்துகொண்டிருந்த அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து நான் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதிவிட, ஆட்டோ என் வலதுபுறமாக 3 முறை சுற்றி, என்னை வெளியே தூக்கி எறிந்தது. என் இடதுகை என் பையை இறுக்கி பிடித்துக்கொண்டு இருந்தது. வலதுகை எலும்பு உடைந்துவிட்டதால், கை வீக்கமாகிக் கொண்டே போனது. சட்டை முழுதும் இரத்தமாக, என்ன நடந்தது என்று உணருவதுக்குள் நான் அங்கேயே மயங்கிவிட்டேன். இலட்சியத்தை தழுவிட நினைத்த என்னை, மரணம் தழுவிட ஆசைப்பட்டது.

மாலை சுமார் 6 மணி. மெல்ல என் கண்களை திறந்து பார்த்தேன் மருத்துவமனை படுக்கையில் இருந்து. கட்டுப்போட்ட நிலையில் என் வலதுகை. உடல் முழுதும் வலி. ஆட்டோவில் இருந்து எறியப்பட்டதால், கை கால்களில் காயங்கள். என் இடதுகையில் சொட்டு சொட்டாய் நீர் துளிகள் விழுவதை உணர்ந்தேன். மெல்ல என் முகத்தை இடப்புறம் திருப்ப, கண்கள் குலமாக சந்தியா என் அருகே அமர்ந்திருந்தாள். என் கையை மெல்ல எடுத்து அவளது கண்ணீரை துடைக்க, "என்ன டா கிருஷ்ணா. என் உயிரே போய்டுச்சு" என்று சொல்லி, என் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, என் மார்பில் சாய்ந்தாள்.

"சந்தியா... அழாத. ஒன்னும் பெருசா ஆகலேல." என்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில், "என்ன மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி. ஹொவ் ஆர் யு பீலிங் நவ்.??" என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்த டாக்டரை கண்டதும் சந்தியா என்னிடம் இருந்து தன்னை சற்று விலக்கிக் கொண்டாள்.

"பரவால டாக்டர். வலி தான் அதிகமா இருக்கு."

"இன்னும் 2 நாள் வலி அப்படி தான் இருக்கும். உங்க கை fracture ஆயிருக்கு. ஆட்டோ ல இருந்த கம்பியோ ஆணியோ உங்க கால்ல கிளிச்சிருக்கு. அதுக்கு stitching போட்டு இருக்கு. மத்ததெல்லாம் வெறும் வெளிக்காயம் தான். அதுக்கும் treatment பண்ணி இருக்கோம். 1 வீக் ல கால் stitching பிரிச்சரலாம். கை கட்டு மட்டும் பிரிக்க 1 மாசம் ஆகும். அதுவரைக்கு கொஞ்சம் ஸ்பெஷல் க்கேர் எடுத்துக்கங்க. அதுக்கப்பறம் ஒன்னும் problem இருக்காது." என்ற டாக்டர் சந்தியாவை பார்த்துவிட்டு திரும்ப என்னை பார்த்து "இது உங்க girl friend ஆ???? நீங்க கண் முழிக்கறவரைக்கும் ரொம்ப டென்ஷன் ஆ இருந்தாங்க, actual ஆ உங்க செல்லுலார் போன் ல இருந்த last dialed நம்பர் க்கு கால் பண்ணப்ப இவங்க கெடச்சாங்க. ரொம்ப பயந்துட்டாங்க. நான் தான் ஒன்னும் பெரிய problem இல்லை னு சொல்லி console பண்ணேன். டேக் ரெஸ்ட்..எதாவது வேணும்னா nurse அ கூப்பிடிங்க. அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க. I'll see you tomorrow" என்று டாக்டர் கூறிச் செல்ல, நான் சந்தியாவை பார்த்து "பயப்படாத சந்தியா. அதான் ஒன்னும் பெருசா இல்லை னு டாக்டர் சொல்லிட்டாரே"

"டேய்... உனக்கு தெரியாது. நான் எவளோ அழுதேன்னு. நீ கண் திறக்கற வரைக்கும் உயிரே இல்ல. இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு நீ என்கிட்டே பேசுனதும். இந்தா... இந்த ஜூஸ் அ குடி" என்று என் அருகில் வந்து என்னை அமர வைத்து, என்னை பருக வைத்தாள்.

"அருண் கால் பண்ணுனான் டா. நடந்தத சொன்னேன். அவனும் ரொம்ப பீல் பண்ணுனான். Training ல இருந்து வெளில வர முடியாதாம். Friday evening வந்து உன்ன பாக்கறேன்னு சொல்ல சொன்னான். அது வரைக்கும் என்ன பாத்துக்க சொல்லி இருக்கான். அப்பாக்கு வேற நெஞ்சு வலி வந்து hospital ல இருக்கார். அம்மா தான் hospital கூட்டிட்டு போனாங்க."

"அப்படியா??? நீ மொதல்ல அப்பாவ போய் பாரு. எனக்கு இங்க ஒன்னும் problem இல்ல."

"இல்ல டா. நான் உன் கூட இருக்கேன். அப்பாவ பாத்துக்க அம்மா இருக்காங்க. உன்ன பாத்துக்க யார் இருக்கா??? நான் தானே...." என்று கூறும் அவளது பாசம் என்னை கண்கலங்க வைத்தது.

"சந்தியா... நான் நல்ல தான் இருக்கேன். நீ நைட் இங்க இருக்க வேண்டாம். அது உங்க வீட்ல பிரச்சனை ஆகும். அது மட்டும் இல்லாம அப்பா வேற hospital ல இருக்கார்ல. போய் அப்பாவ பார். I'll be fine here. OK???"

"சரி டா. நான் நாளைக்கு காலைல சீக்கரம் வறேன். எதாவது வேணும்னா போன் பண்ணு" என்று கூறி, செல்ல மனமில்லாமல் சென்றாள் சந்தியா.

அன்று இரவு முழுவதும் வலி உடலில். அதைவிட அதிகமாக மனதில். எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்கள், இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். ஒழுகும் குடிசையில் வாழ்ந்தபோதும், கிழிந்த ஆடைகளை உடுத்திக்கொண்டு அலைந்தபோதும், உணவில்லாமல் உறங்கிய நாட்களிலும் கூட இப்படி ஒரு வேதனை இருந்தது இல்லை என் மனதில். என் ஒரே இலட்சியத்தை இழந்துவிட்டு நிற்கும் இந்த நாள் தான் என் வாழ்வில் மிகவும் மோசமான தருணம்.

அப்படி நான் என்ன பிழை செய்துவிட்டேன்??? சாதிக்க நினைத்தது தான் தவறா??? ஏன் இந்த முட்டுக்கட்டை??? ஏன் என்னை சோதனைக்கும் வேதனைக்கும் உட்படுத்துகிறது என் வாழ்வு??? இத்தனை பேரின் வாழ்த்துக்கள் எங்கு போனது??? சந்தியாவின் பிராத்தனை என்ன ஆனது???

என் இலட்சியத்தின் முதல் தோல்வி இது. திறமை இருந்தும், தகுதி இருந்தும், அளவில்லா தன்னம்பிக்கை இருந்தும், விதியிடம் தோற்றுவிட்டேனே நான். இப்படி ஒரு வாழ்வை தொடர்வது தேவை தானா???

தொடரும் கேள்விக்கான பதில்....


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Friday, February 11, 2011

ஒரு லட்சியவாதியின் காதல் கதை - அத்யாயம்-12

சென்னை வந்தடைந்தேன். அருணின் உறவினரான தமிழ்ச்செல்வனின் வீட்டில் தங்குவதாக முன்னரே முடிவெடுத்திருந்ததால், என் வருகையை அவனுக்கு அருண் முன்னரே கூறி இருந்தான். என்னை பேருந்து நிலையத்திற்கே வந்து சந்தித்த தமிழ், என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

கல்லூரியின் கடைசி நாளில் முடிவெடுத்த தேதியில், மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே, நானும் அருணும் சந்தித்தோம். அருண் என்னைக் கண்டதும், ஓடி வந்து அணைத்துக்கொண்டான். சந்தியா தாமதமாக வந்தாள். சந்தியா வருவதை பார்த்த அருண், அவளை கோவமூட்ட, என்னை அணைத்தபடி நின்றான். அதைப்பார்த்த சந்தியா அருணை பார்த்து, தன் ஆள்க்காட்டி விரலை காண்பித்து முறைத்துக் கொண்டே நடந்து வந்தாள். அதை கண்ட அருண், என் கழுதை இறுக்கி அலுத்துவது போல பாவிக்க, சந்தியா அக்கம் பக்கம் "கல்" ஐ தேடியபடியே அருகில் ஓடி வந்தாள்.

"டேய் அருண்.... ஆனா ஒரு நாள் நீ என்கிட்டே நல்லா வாங்க போற. அன்னைக்கு தெரியும் சந்தியா யாருன்னு." என்று கூறி சிரித்தாள்.

வெகு நாட்களுக்கு பிறகு நாங்கள் சந்தித்ததால், வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
"என்ன அருண், உன் pilot ட்ரைனிங் எப்படி போகுது??" என்றாள் சந்தியா.
"அட. அத ஏன் சந்தியா கேக்கற... கொடுமையா இருக்கு. கிளாஸ் ரூம்ல உக்காரவெச்சு நம்ம 1st இயர்ல படிச்ச பாடத்தையெல்லாம் மறுபடியும் நடத்துறாங்க. அத விடு. உன் MBA கிளாஸ் எப்படி போகுது.??"

"உனக்கு படிச்சதயே படிக்க போர் அடிக்குது. எனக்கு என்ன சொல்றங்கனே புரியல. Aero லயாவது சர்க்யுட், போர்டு, லேப் எக்ஸ்பெரிமென்ட்னு இருக்கும், இங்க எல்லாம் தியரியா இருக்கு. புரியாத மொழில படம் பாத்த மாறி இருக்கு. women's காலேஜ் ஆ வேற போச்சு. சைட் அடிக்க கூட ஆள் இல்ல." என்று சொல்லி என்னை வெறுப்பேற்றினாள் சந்தியா.

பேசிக்கொண்டே நடந்து சென்று கடல் அலையில் கால் நனைத்தோம். "மச்சான்..!! மீன் சாப்படலாம் டா. smell நல்லா இருக்கு." என்ற அருண், ஒரு கைவண்டி கடைக்கு எங்களை அழைத்துச் சென்றான்.
"தம்பி.. 3 மீன் குடுப்பா சூடா.." என்று சொன்ன அருணைப் பார்த்து சந்தியா "எனக்கு வேண்டாம் அருண். நீங்க சாப்பிடுங்க." என்றாள்.

"அட.. நீ என்ன சந்தியா.. ஏன் காமெடி பண்ற??? 3 மீன் எனக்கு மட்டும் தான் ஆர்டர் பண்ணேன். உனக்கும் சேத்துனு நெனச்சுட்டியா?? நீ எப்பவுமே இப்படி தான் போ..." என்று கேலி செய்ய, சந்தியா "டேய், உனக்கு நேரம் நெருங்கிட்டு இருக்குடா.. மறந்துறாத..." என்றாள்.

"இந்தா மச்சான்... நீ கேட்ட புக்ஸ். ஒழுங்கா prepare பண்ணு. உனக்கு சொல்லனும்னு இல்ல.. selection லிஸ்ட்ல உன் பெயர் தான் 1st இருக்கணும்" என்று கட்டளையிடும் அருண் ஒருபுறம் என்றால் "உன்மேல நம்பிக்கை இருக்கு கிருஷ்ணா. நீ அசத்திருவ..!!!" என்று ஊக்கப்படுத்தும் சந்தியா மறுபுறம்.

"Thanks அருண்... Thanks சந்தியா..."

"டேய் மச்சான்.... தமிழ் இன்னைக்கு ஊருக்கு போறான்ல. அவன் கிட்ட ஒரு செல்லுலார் போன் இருக்கு இல்ல. அத உன்கிட்ட குடுக்க சொல்றேன். இந்த வாரம் புள்ள யூஸ் பண்ணிக்க. சீக்கரம் நானும் ஒன்னு வாங்கிடுவேன். காலம் எப்படி மாறிபோச்சு பாரு. எங்க இருந்தாலும் பேசறதுக்கு ஒரு போன். உன்ன மாறி ஒருத்தன் தான் இத கண்டுபுடிசிருப்பான்" என்று மறைமுகமாக என் திறமையை பாராட்ட அருண் எப்போது தவறுவதே இல்லை.

"எங்க அப்பா கூட ஒரு செல்லுலார் போன் என்னை வாங்கிக்க சொல்லி இருக்கார். எங்களுக்கு தான் இது ரொம்ப useful" என்ற சந்தியா, தன் கை கடிகாரத்தை பார்த்துவிட்டு "அச்சச்சோ.... Time ஆச்சு. அப்பா தேடுவார். நான் வீட்டுக்கு போகணும்" என்று கூறிக்கொண்டே எழுந்து நின்றாள்.

"சந்தியா... டேய் கிருஷ்ணா.... நீங்க அப்படியே பேசிட்டு நடந்து போங்க. அந்த சட்டில இருக்கற மீனுக்கு என்ன புடிச்சிருக்கு போல. அதான் அடுப்புல துடிக்குது. நான் அதையும் சாப்டுட்டு பைக் கிட்ட வந்து வெயிட் பண்றேன்." என்ற அருணை பார்த்து சந்தியா "பக்கத்துல இருக்குற ரெண்டு மீனுக்கும் கூட உன்ன புடிச்சிருக்காம். அதனால அதையும் சாப்டுட்டு மெதுவாஆஆஆஆ...... வா".

"புரியுது புரியுது போ... சந்தோசமா இரு போ.." என்று தான் கையை உயர்த்தி ஆசி வழங்குவதை போல பாவிதான் அருண். அவனை பார்த்து சிரித்துவிட்டு நானும் சந்தியாவும் நடக்க ஆரம்பித்தோம்.

"இன்னும் 2 நாள்ல உன் கனவு நிறைவேற போகுது. நெனச்சாலே ரொம்ப சந்தோசமா இருக்கு கிருஷ்ணா. ஆனா ஒரு வருத்தம். அன்னைக்கு எனக்கு செமினார் இருக்கு. என்னால உன்னோட வரமுடியாது. நான் எங்க அப்பா செல்லுலார் போன் அ அன்னைக்கு காலேஜ் எடுத்துட்டு போறேன். இது தான் நம்பர் XXXXXXXXXX. Interview முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணு. நான் செமினார்ல இருந்தா, முடிஞ்சதும் கால் பண்றேன். அந்த சந்தோசமான செய்திக்காக நான் வெயிட் பண்றேன். ஆல் தி பெஸ்ட் கிருஷ்ணா..."

"நான் interview க்கு போறதுக்கு முன்னாடியும் உனக்கு கால் பண்றேன். உன் வாய்ஸ் அ கேக்கணும் சந்தியா"

"OK கிருஷ்ணா.. Job கெடச்சதும், அடுத்து என்ன???" என்று ஓர் எதிர்பார்ப்புடன் கேட்டாள் சந்தியா. "போகவேண்டியது தான்" என்று கூறி சந்தியா அருகே வண்டியை நிறுத்தினான் அருண்.

"என்ன சந்தியா.. உங்க ரூட்க்கு இங்க ஈசியா பஸ் கிடைக்காதுல்ல???" என்றான் அருண்.
"ம்.... 2 இல்ல 3 பஸ் மாறி தான் போகணும். என் ஸ்கூட்டிய சர்வீஸ்க்கு விட்டுட்டேன். அதான் பஸ்ல வந்தேன்." என்று கூறி சந்தியா, அருகில் வந்துக்கொண்டிருந்த பேருந்தினை பார்த்துக்கொண்டிருந்தாள். கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில் சந்தியாவை அனுப்ப மனமில்லை எனக்கு.

"டேய் மச்சான். தமிழ் வீடு இங்க தான பக்கத்துல. நான் போய்க்குவேன். நீ சந்தியா வ அவங்க வீட்ல விட்டுட்டு போறியா?? ப்ளீஸ்." என்றேன்.

"என்ன மச்சான்...??? இது கூட செய்ய மாட்டேனா?? சந்தியா... வா..." என்று கூறிய அருணை பார்த்து "இல்ல நான் பஸ்லயே..................." என்று சந்தியா சொல்ல, "அட பயப்படாத சந்தியா. நான் flight ஏ ஓட்ட போறேன். பைக் ஓட்ட மாட்டேனா???. உன்ன பழிவாங்க இன்னும் ரொம்ப நாள் இருக்கு. பயப்படாமா ஏறிக்க.." என்று கூறி சிரித்தான் அருண்.

சந்தியாவும் ஏறி அமர, "மச்சான்.. நான் நாளைக்கு ட்ரைனிங்க்கு போய்டுவேன். Friday evening
தான் வருவேன். நான் வந்ததும் ட்ரீட் வெச்சுக்கலாம். Interview அன்னைக்கு evening ட்ரைனிங் முடிஞ்சதும் உனக்கு போன் பண்றேன். ஆல் தி பெஸ்ட்..!! "
என்று கூறி கை குலுக்கிவிட்டு சந்தியாவை அழைத்துச்சென்றான். சந்தியா என்னை பார்த்தபடியே சென்றாள்.

மறுநாள் Interview விற்கு தயாராகிக்கொண்டிருந்தேன். தமிழின் செல்லுலார் போன் சிணுங்கியது. மறுமுனையில் சந்தியா. "என்ன கிருஷ்ணா.. நல்லா prapare பண்ணிட்டியா? நாளைக்கு உன் life ஏ மாற போகுது. ஆல் தி பெஸ்ட்".

"Thank you சந்தியா.. நாளைக்கு காலைல ஆட்டோ ஏறிட்டு உனக்கு போன் பண்ணுவேன். அதனால போன் அ கைலயே வெச்சிரு." என்றேன்.

என் வாழ்வில் விடியலைக் கொண்டுவரப்போகும் நாள் விடிந்தது. நான் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், போன் சிணுங்கியது. "கிருஷ்ணா... ஆல் தி பெஸ்ட் பார் யுவர் இண்டர்வ்யு" என்றார் ஜான் சார். "Thank you சார். நானே உங்களுக்கு போன் பண்ணனும்னு இருந்தேன்"

"பரவால கிருஷ்ணா. உன்னக்கு விஸ் பண்ண நான் தான் கூப்பிடனும். சந்தியா இந்த போன் நம்பர் அ குடுத்தாலதான் என்னால உனக்கு விஷ் பண்ண முடிஞ்சுது. நல்லபடியா interview முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணு. I'll be waiting for your call Krishna" என்றார்.

எத்தனை பேர் என் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள். இத்தனை நல்ல உள்ளங்களை வென்றதே என் முதல் வெற்றி தானே. ஒரு பையில் என் certificate file ஐயும், செல்லுலார் போனையும் வைத்துக்கொண்டு உற்ச்சாகத்துடன் புறப்பட்டேன்.

"உன்னால் முடியும்" என்று முன்கன்னாடியில் ஒட்டிய ஸ்டிக்கருடன் ஒரு ஆட்டோ என் அருகே வந்து நின்றது. என் தன்னம்பிக்கைக்கு மேலும் வழு சேர்த்த அந்த ஆட்டோவில் ஏறி புறப்பட்டேன்.

தொடரும் நேர்முகத்தேர்வு நாள்.....

என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Monday, January 17, 2011

அந்த ஒரு அரியர் பேப்பர் - சிறுகதை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையனா, சந்திரமுகி கிட்ட பேசிட்டு இருந்த நேரம். ஒட்டுமொத்த தியேட்டரும் அமைதியா இருந்துச்சு. பாதி பேர் சீட் நுனில உக்காந்து படம் பாத்திட்டு இருக்காங்க. "Excuse me boss.. you got a text message" னு என் செல் போன் சத்தம்.. தலைவர் ஸ்க்ரீன் ல பேசிட்டு இருக்கார். எஸ்எம்எஸ் ஆ முக்கியம் னு அத நான் கண்டுக்கவே இல்ல. அடுத்த 10 நொடில "beep" னு இன்னொரு செல் சத்தம். மறுபடியும் 2 நொடில "கடைசி வரைக்கும் வேல வேட்டிக்கே போகாம நாம வாழ்ந்து காட்டனும். இது தான் நம்ம லட்சியம்" னு வடிவேல் வின்னர் படத்துல சொல்ற டயலாக். இது நம்ம ரமேஷ் எஸ்எம்எஸ் டோன் ஆச்சே.!! எல்லோருக்கும் எஸ்எம்எஸ் வருதுன்னா.. நாங்க 35 பேர் class அ பங்க் அடிச்சதுனால காலேஜ் ல என்னமோ பிரச்சனை ஆயிடுச்சு போலனு ஒரு எண்ணம் என்ன படத்த பாக்கவே விடல. சரி என்னவா இருந்தாலும் அப்பறம் பாத்துக்கலாம் னு மறுபடியும் படத்துல மூழ்கிட்டேன்.

"டேய். என்ன தான் சொல்லு.. நம்ம தலைவர் "தலைவர்" தான்டா.. சும்மா அசத்தி இருக்கார்." னு தியேட்டர் படில இறங்கி வரும்போது சொல்லிகிட்டே வந்தான் கேசு (கேசவமூர்த்தி). "இந்த கூட்டத்துல எதுக்கு போய் பைக்க எடுத்துட்டு. கொஞ்ச நேரம் இங்கயே நிப்போம்" னு ரமேஷ் சொல்ல, அப்ப தான் எஸ்எம்எஸ் ஞாபகம் வந்துச்சு. யாரு அனுப்புனானு போன் அ எடுத்துப் பாத்தேன். "டேய் ரமேஷ். எனக்கு நம்ம "படிப்பு" பஞ்சாபி (பஞ்சாபிகேசன்) எஸ்எம்எஸ் அனுப்பி இருக்கான் டா.. ஆச்சர்யமா இருக்கு" னு சொல்லிட்டே எஸ்எம்எஸ் அ ஓப்பன் பண்ணுனா "One good news. One bad news" னு இருந்துச்சு. அத பாத்ததும் ஒன்னும் புரியல எனக்கு. "டேய்.. ரமேஷ். இந்த கிறுக்குப்பய என்ன அனுப்பி இருக்கான்னு பாரு" னு போன் அ குடுத்தேன். அத பாத்துட்டு, அவன் போன் அ எடுத்து எஸ்எம்எஸ் அ பாத்தா, அதுவும் பஞ்சாபி தான் அனுப்பி இருக்கான். ஆனா "Two good news" இருக்கு அதுல.

குமார் என்ன பாத்து ஓடி வந்து "முத்து.. revaluation ரிசல்ட் வந்திருச்சு டா.. அத தான் அந்த சனியன் அப்படி அனுப்பி இருக்கான். நான் இப்ப தான் அவன் கிட்ட போன்ல பேசுனேன். சாரி டா முத்து. நீ revaluation லயும் பெயில் டா. ரமேஷ், நீ பாஸ் ஆயிட்ட. அதுவும் ஜஸ்ட் பாஸ். எவனோ கருணை ல போட்டு இருக்கான் போல."

படம் பாத்த சந்தோஷம் ரிசல்ட்ட கேட்டதும் காணாம போச்சு.
"விடு டா. இந்த செமஸ்டர்ல சேத்து எழுதுனா போச்சு" னு ரமேஷ் ஆறுதல் சொல்ல "உனக்கென்ன..?? நீ பாஸ் ஆயிட்ட.. என்ன வேணும்னாலும் சொல்லுவ" னு அவன பாத்து ஒரு கடி கடிச்சேன். ரமேஷ் சொல்றதும் சரி தான். இப்ப பீல் பண்ணி என்ன பண்றது. அடுத்த செம்ல நல்லா படிச்சு, 80 மார்க் எடுப்பேன்னு எங்க குலதெய்வம் கருப்பசாமிக்கு மனசுக்குள்ளயே சத்தியம் செஞ்சேன்.

பெயில் ஆனது C-Programming பேப்பர். நமக்கு programming னாலே சமுத்திரம் படத்துல கவுண்டமணி செந்தில பாத்து பயப்படற மாறி. லேப் ல கம்ப்யூட்டர ஆண் பண்ண தெரியாம, ஏற்கனவே ஆண் ஆகி இருக்குற கம்ப்யூட்டர்ல போய் உக்காருவேன். கம்ப்யூட்டர்ல எனக்கு அவ்வளவு knowledge. இந்த பேப்பர்ல பாஸ் ஆக எங்க class பட்ட பாடு இருக்கே. அத சொல்லனும்னா, பரிச்சை எழுதுற 3 மணி நேரத்துக்கு மேல தான் ஆகும். கார்த்தி பிட்டு, குமார் மனப்பாடம், வினோத் color pen, sketch னு ஏதேதோ பண்ணி பாஸ் பண்ணிட்டாங்க. C-Programming பரிட்சைக்கு geometry box எடுத்துட்டு போன ஒரே ஆளு, நம்ம "படிப்பு" பஞ்சாபி தான். class first ம் அவன் தான். இப்ப நான் மட்டும் தான் இந்த பேப்பர் ல அரியர். எனக்கு சொல்லி குடுத்து help பண்ண நம்ம பசங்களால முடியாது. அவங்க பாஸ் ஆனதே பெரிய விஷயம். என்ன பண்றதுனு தெரியாம இப்படியே கொஞ்ச நாள் போய்டுச்சு.

ஒரு நாள் பைக் ரிப்பேர் பண்ண குடுத்துட்டு பஸ்ல காலேஜ்க்கு போனேன். குமார் அந்த பஸ்ல தான் வருவான். நம்ம பசங்க தான் எப்பவும் பொண்ணுக பின்னாடி தான் பஸ்ல நிப்பாங்க. நான் மட்டும் என்ன விதிவிலக்கா(இளிச்சவாயனா)?? நானும் போய் குமார் பக்கத்துல நிக்க, "ஏன்டா மச்சான். ரொம்ப dull ஆ இருக்க" னு அவன் கேக்க, இப்பவாச்சும் ஒருத்தன் கேட்டானேனு சந்தோசப்பட்டு எல்லாத்தையும் கொட்டி தீத்தேன். "நேத்து வேற semester exam timetable வந்திருச்சுல்ல. அரியர் பேப்பர இந்த செம்ல clear பண்ணனும்டா. அத நெனச்சா தான் பயமா இருக்கு"

"எப்ப டா அறியார் exam?" னு குமார் என்ன பாத்து கேட்டான்.
"நம்ம கடைசி exam இருக்குல்ல, அதுக்கு அடுத்த நாள். நம்ம கேசு தான் timetable அ பாத்துட்டு sms அனுப்புனான். மத்த exam னா நம்ம பசங்க கிட்ட கேட்டா போதும். இது programming பேப்பர்ல. நம்ம தான் exam முடிஞ்சதுமே books, notes, record note, எல்லாத்தையும் எடைக்கு போட்டு படத்துக்கு போய்ட்டோமே. படிக்க notes இல்ல. notes குடுடானு "படிப்பு" பஞ்சாபி கிட்ட கேட்டா, அவன் என்னமோ பெரிய ---------- மாதிரி சீன் போடுறான். நீ வேணும்னா பாரு. ஒருநாள் அந்த பஞ்சாபிக்கு என் கையால தான்டா பால்..."

"அவன் எல்லாம் ஒரு ஆளுனு அவன் கிட்ட போய் கேட்டிருக்க. சரி விடு.. இப்ப என்ன தான் பண்ண போற?? னு குமார் கேக்க "அது தான் டா தெரியல.. பசங்க சொன்னாங்க 4 program கண்டிப்பா கேப்பாங்க. program அ மனப்பாடம் பண்ணிக்கனு"

"நான் கூட 2 program எழுதி தான் பாஸ் ஆனேன்." னு குமார் சொல்ல, "CSE பசங்களுக்கும் நமக்கும் ஆகாது. அவனுங்க record notes அ வாங்குனா, ஏதோ கொஞ்சம் சமாளிக்கலாம். ஆனா அவனுங்க கிட்ட போய் கேட்டா, நம்ம கெத்து என்ன ஆகறது." னு சொல்லிட்டு இருந்தப்ப, எங்களுக்கு முன்னாடி நின்னுகிட்டி இருந்த பொண்ணு ஒன்னு என்ன திரும்பி பாத்து சிரிச்சுது.

"இவ ஏன் நம்மள பாத்து பல்லக் காட்டுறா??" என் பொழப்பு எல்லாத்துக்கும் முன்னாடி சிரிப்பா சிரிக்குதுன்னு மட்டு நல்லா புரிஞ்சுது. இத்தோட நிறுத்திக்கணும். இனி பேசுனா நமக்கு இன்னும் கேவலம் தான்னு அமைதியா வேடிக்க பாத்துட்டு வந்தேன். அந்த blue color chudidhar போட்ட பொண்ணு என்ன திரும்பி பாத்து "நான் வேணும்னா என் notes அ தரட்டுமா" னு கேட்டுச்சு.

இந்த ஒன்னே முக்கால் வருசத்துல இப்ப தான் முதல் தடவ ஒரு பொண்ணு என்ன பாத்து அதுவா பேசுது. மனசுக்குள்ள 1000 பட்டாம்பூச்சி பறந்துச்சு. குயில் கூவுது. மயில் ஆடுது.... கிட்ட தட்ட ஒரு jungle குள்ள போன மாதிரி பீலிங். என்ன தான் உள்ளுக்குள்ள சந்தோசமா இருந்தாலும், வெளிய நம்ம கெத்த விட்டுகுடுப்போமா?? "அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல.." னு அவள பாத்து உதடு தான் சொல்லுது, எங்க குடுக்காம போய்டுவாளோனு மனசு கடந்து அடிச்சிக்குது.

"வேண்டாட்டி போ.. எனக்கென்ன.. நீ தான் மறுபடியும் பெயில் ஆக போற" னு சொல்லிட்டு திரும்பி நின்னுட்டா அந்த பொண்ணு. இதுக்கு பேர் தான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறதுனு சொல்லுவாங்க. இவளையும் விட்டுட்டா, நமக்கு வேற வழி இல்லனு நல்லா தெரிஞ்சுபோச்சு. சரி.. எதாவது சொல்லி சமாளிப்போம்னு "ஏய். ஏதோ நீயா வந்து தறேன்குற. உன் மனசு சங்கடப்பட கூடாதுனு வாங்கிக்குறேன்" னு சொல்லி அசடு வழிய வேண்டியதா போச்சு.

"அப்படி வா வழிக்கு. நாளைக்கு எடுத்துட்டு வறேன். வந்து வாங்கிக்க" னு அவ சொன்னதும் காலேஜ் ஸ்டாப் வந்திருச்சு. நம்ம தான் தம் அடிக்காம class க்கு போகக்கூடாதுன்னு எழுதாத சட்டம் இருக்கே. அத எப்படி அவமதிக்கறது?? அதனால, நான் அப்படியே டீக்கடை பக்கம் ஒதுங்க, அவ காலேஜ்க்கு போய்ட்டா. "தம்"ம பத்த வெச்சு பசங்க கிட்ட பேச ஆரம்பிச்சப்ப தான் தோனுச்சு. அவ "பெயர்"ர கூட கேக்கலயே. நாளைக்கு அவ நோட்ட பாத்துக்கலாம். நாளைக்கும் பஸ்ல தான் போகணும் நோட் வாங்கனு முடிவு பண்ணிட்டு class க்கு போனேன்.

சொன்ன மாதிரி notes எல்லாம் எடுத்துட்டு வந்து குடுத்தா. "Thanks" னு சொல்லி வாங்கி open பண்ணி first அவ பெயர் அ தான் பாத்தேன். "சங்கீதா" னு எழுதி பூ எல்லாம் வரஞ்சு இருக்கு. decoration
ல இவளுகள அடிச்சுக்கவே முடியாது. இப்படி தான் ஏதேதோ வரஞ்சு பாஸ் பண்றாளுக. நம்ம தான் இந்த சூது வாது தெரியாமலே வளந்துட்டோம்.

ஒரு பொட்டபுள்ள கிட்ட நோட்ஸ் வாங்கி மறுபடியும் பெயில் ஆனா, அது இன்னும் ரொம்ப கேவலமா போய்டும். அதனால எப்படியாச்சும் பாஸ் ஆகணும்னு நெனச்சு படிக்க ஆரம்பிச்சேன். வழக்கம் போல தான். ஒன்னும் புரியல. எவன் டா கண்டுபுடிச்சான் இந்த prime number program அ, பத்து லைன் தான் இருக்கு, இது நம்மள படுத்துற பாடு. முடியல டா சாமி. இதுவே என் மண்டைல ஏறலையே.. நான் எப்படி stack, queue program எல்லாம் படிக்கப் போறேன்னு எனக்கே தெரியல. என்னமோ போனு note அ தூக்கி அடிச்சிருக்கேன் சில சமயம். புரிஞ்சு படிச்சா இனி சரி வராதுன்னு முடிவு பண்ணி மனப்பாடம் பண்ண ஆரம்பிச்சேன். இந்த டைம் ல பாஸ் பண்ணுனாலே போதும்னு கருப்பசாமிக்கு செஞ்ச சாத்தியத்த ஆல்ட்டர் பண்ணிட்டேன்.

எல்லா பரிட்சையும் எப்படியோ எழுதிட்டேன். இந்த அரியர் தான் மிச்சம். கடைசி பரிட்சை முடிச்சிட்டு பசங்க எல்லாம் படத்துக்கு போனாங்க. நானோ, அதே prime number program அ 536 ஆவது தடவ மனப்பாடம் பண்ணிட்டு இருந்தேன். சந்திரமுகி படத்துல "என்ன கொடுமை சரவணன் இது" னு பிரபு சொன்ன dialogue, எனக்கு சொன்ன மாதிரியே இருந்துச்சு. இன்னைக்கு day night match தான்னு முடிவு பண்ணி அம்மா கிட்ட flask ல coffee எல்லாம் போட்டு வெக்க சொல்லி, கஷ்டப்பட்டு, தட்டு தடுமாறி, ஒருவழியா படிச்சு முடிச்சேன்.

Exam 2 மணிக்கு தான. சீக்கிரம் போய் ஒரு revision பாத்தரலாம் னு நெனச்சு பைக்க எடுத்தா, tyre puncture. ஆரம்பமே அற்புதம்டானு கருப்பசாமி மேல பாரத்த போட்டு, ஓடி போய் பஸ் ஏறி காலேஜ்க்கு போனேன். காலேஜ்க்கு உள்ள போகும்போது , முன்னாடி சங்கீதா வந்தா.. பைக் puncture ஆனா கேட்ட சகுனம், சங்கீதா வ பாத்த நல்லா சகுனம் cancel பன்னிருச்சுன்னு சந்தோசப் பட்டுக்கிட்டேன்.

சங்கீதா என்ன பாத்து "நல்லா படிச்சியா??" னு கேக்க, நானும் ம்...னு தலையை ஆட்டிட்டு மனசுக்குள்ள stack program அ சொல்லி பாத்துட்டு இருந்தேன். "All the best..!!" னு சொல்லிட்டு சிரிச்சிட்டு போனா. அவ போறத பாத்துட்டே இருந்தேன். 1:45 அலெர்ட் பெல் அடிச்சாங்க. வேக வேகமா போய் நோட்டீஸ் போர்டுல exam hall அ தேடுனேன். நம்ம கெட்ட நேரம் சும்மா விடுமா??? Exam hall பக்கத்து building ல போட்டுட்டாங்க. வேக வேகமா அங்கயும் ஓடி, "class ரூம்"ம தேடி கண்டுபுடிச்சு உள்ள போய் என் டெஸ்க்க தேடிப்பாத்தா, first row ல first table. இது வேறயா..?? என்னமோ போனு விட்டுட்டேன். மனசுக்குள்ள program revision மட்டும் ஓடிட்டே இருக்கு.

இன்னிக்குனு பாத்து "ஸ்ட்ரிக்ட்" சிதம்பரம் சார் சூப்பர்வைசிங். யாரா இருந்தா நமக்கென்ன. பிட் அடிச்சாதான பிரச்சனை, நான் தான் நல்லா மனப்பாடம் பண்ணிட்டனே, அப்பறம் என்னனு கொஞ்சம் கெத்தா தான் உக்காந்திருந்தேன். மொத்தமாவே 7 பேருதான் exam hall ல இருக்காங்க. மத்த இடம் எல்லாம் காளியா தான் இருக்கு. அரியர் exam னாலே இப்படி தான் இருக்கும். பேப்பர எடுத்து Registration Number, Subject Name னு எல்லாத்தையும் பில் பண்ணிட்டு, question பேப்பர்க்காக காத்திட்டு இருந்தேன்.

"ஸ்ட்ரிக்ட்" சிதம்பரம் சார் கடைசில இருந்து question பேப்பர் குடுத்துட்டு வந்தார். எனக்கு கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு. prime number program வந்தா பரவால. queue program மட்டும் வரக்கூடாதுன்னு கருப்பசாமிய வேண்டிக்கிட்டு இருந்தேன். பச்சை color question பேப்பர என் கைல குடுத்துட்டு சார் திரும்பறதுக் குள்ள, வேகமா questions அ படிச்சுப் பாத்தா, ஒரு program question கூட இல்ல.

நாசமா போச்சு. வெச்சுட்டாங்கய்யா ஆப்பு. சரி.. ஆனது ஆச்சு. theory questions எதாச்சும் easy யா இருந்தா எழுதுவோம்னு தேடுனா "Difference between Oracle and MS SQL" னு question எல்லாம் இருக்கு. ஒரு நிமிஷம் குழம்பி போய் என்னடானு பாத்தா அது DMBS question பேப்பர்.

அப்பாடா.... இப்ப தான் உயிரே வந்துச்சு. எந்திருச்சு, "சார், இது DBMS question பேப்பர். எனக்கு C-Programming. அந்த question பேப்பர குடுங்க" னு சொல்ல, இதுக்குள்ளயே 15 நிமிஷம் ஓடிப்போய்டுச்சு. அவரு question pouch அ திறந்து தேடித் பாத்துட்டு, "அந்த question paper இங்க இல்லையே. நீ சரியான exam hall க்கு தான் வந்தியா" னு கேட்டு, இன்னோரு இடிய என் தலையில போட்டார்.

டெஸ்க்ல இருந்தது என் நம்பர் தான்னு conform பண்ணிட்டு, "சார், இங்க பாருங்க. என் நம்பர் தான் இருக்கு" னு சொல்ல, அவரும் பாத்துட்டு "சரியாதான் இருக்கு" னு சொல்லி, போர்டு அ பாத்துட்டு, என்ன திரும்பி பாத்து "ஏன்டா.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?? C-Programming exam காலைலடா. இப்ப போய் வந்திருக்க. timetable ல டைம் அ கூட ஒழுங்கா பாக்கமாட்டியா??" னு திட்ட, "fan"னுக்கு கீழ நின்னுட்டு இருந்த எனக்கு குப்புன்னு வேர்த்திருச்சு. தலைல கைய வெச்சு அப்படியே chair ல உக்காந்தேன்.

"இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது. போ. போயிட்டு அடுத்த செம்லயாவது ஒழுங்கா exam time அ பாத்துட்டு வா." னு சார் சொல்ல, வேர்வைய்ய தொடச்சுகிட்டு எந்திருச்சு நின்னு சார் அ பாத்து கேட்டேன் "போ.. போ.. னா எங்க சார் போறது??? லட்சுமி தியேட்டர் ல கூட இப்ப படம் போட்டிருப்பாங்க...".

DEDICATED TO ALL MECHANICAL ENGINEERING STUDENTS.



என்றும் அன்புடன்,
இராஜராஜன்