Sunday, December 5, 2010

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-8

சந்தியாவை தவிர்க்கவும் பிரியவும் எனக்குள் நானே தயார் ஆகிக்கொண்டிருந்த நேரம் அது. குழப்பமான சூழ்நிலையில் செய்வதறியாது திரிந்து கொண்டிருந்தேன்.


என் இந்த செய்கைகளை கண்டு சற்று பயந்துபோன அருண் "என்ன மச்சான் ஆச்சு!! நானும் உன்ன காலை ல இருந்து பாக்கறேன், பைத்தியம் புடிச்சவன் மாறி இங்கயும் அங்கயும் போற. சாப்பிட கூட இல்ல. என்ன பிரச்சனைன்னு சொல்லு டா.... நான் உன் friend தான..!!" என்றான்.

மனதில் அடக்கி வைத்துக்கொண்டிருந்த அத்தனையும் கண்ணீராய் வெளிவந்தது அருண் கேட்ட மாத்திரத்தில். அருண் என் ஒரே நண்பன். மிக அதிக பக்குவம் உள்ளவன். "அழு... நல்ல அழு.... அழுதா தான் துக்கம் குறையும்" என்றவன் என்னை இறுக்கி அணைத்துக்கொண்டான். என் வேதனையை குறைக்க அவன் எனக்கு கூறிய அறிவுரைகள், என்னை பக்குவபடுத்த துவங்கியது. நேரம் ஆக ஆக என் மனதின் பாரம் குறைய துவங்கியது. லேசான தெளிவு என் முகத்தில் தென்பட, "இப்ப சொல்லு... என்ன பிரச்சனை??" என்றான் அருண்.

இத்தனை நாள் எல்லோர் மனதில் சந்தியவிற்க்கும் எனக்கும் இடையே காதல் தான் என்ற எண்ணம் இருந்த நிலையில், அன்று தான் முதல் முறையாக என் காதலை நான் வெளிப்படுத்தியது. சந்தியாவிடம் அல்ல, என் உயிர் நண்பனிடம். பெருமூச்சு விட்டபடி "இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான் டா. நீயா சொல்லற வரைக்கும் கேக்காம இருப்பது நாகரிகம் னு நெனச்சு தான் இதுவரைக்கும் நான் கேக்கல" என்ற அருண் என்னை அணைத்தபடியே கேட்டான் "சரி..!! இப்ப என்ன problem அதுல.. உங்க ரெண்டு பேருக்கும் நல்ல understanding இருக்கு.. நல்ல பொருத்தமும் தான். அப்பறம் என்ன??? சந்தியா என்ன சொல்றா?"

மெல்லிய குரலில் "அவளுக்கும் எனக்கும் இது ஒத்துவரும்னு எனக்கு தோணலை.... அவ status என்ன??, family, caste னு பல problem இருக்கு. அவ என்ன எப்படி நெனச்சு பழகிட்டு இருக்கானு தெரியல.... இதெல்லாம் யோசிச்சு தான் இந்த காதல இப்படியே விட்டரலாம்னு நெனச்சேன். ஆனா என்னால முடியல.. நாளைக்கு இந்த நினைப்போட காலேஜ் ல அவ முகத்த எப்படி பாக்கறது னு தெரியல. கண் கலங்காம இருக்க முடியுமா னு கூட தெரியல..." என ஆரம்பித்த என்னை நிறுத்திய அருண் "எனக்கு தெரிஞ்சு அவ உனக்கு ஒரு நல்ல friend. Friend னு நெனச்சு நீ எத்தனை நாள் வேணும்னாலும் பழகலாம். ஆனா காதல் வந்தா அப்படி பழகறது கொஞ்சம்.. ம்.ம்.... இல்ல… இல்ல… ரொம்பவே கஷ்டம் தான். எனக்கென்னமோ அவளும் உன்ன காதலிக்கிறா னு தான் தோணுது. அவ செஞ்ச help எல்லாம் வெறும் நட்புக்காக மட்டும் செஞ்ச மாறி தெரியல, நான் வேணும்னா அவ கிட்ட லேசா கேட்டு பாக்கவா???" என்றான்.

"டேய்!! அவ கிட்ட கேக்கறது ஒன்னும் பெருசில்ல.
அவ இல்லைன்னு சொன்னாலும் எனக்கு தான் பிரச்சனை.
ஆமாம் னு சொன்னாலும் எனக்கு தான் பிரச்சனை."
என்ற என்னிடம் சட்டென்று கேட்டான் அருண் "அவ இல்லைன்னு சொன்னா உனக்கு வேதனை தான் மிஞ்சும். அது எனக்கு நல்லா புரியுது. ஆனா ஆமாம் னு சொன்னா என்ன பிரச்சனை உனக்கு??? அது தான் எனக்கு புரியல...."

"என் தகுதி, அந்தஸ்த்து, ஜாதி னு பல விஷயம் இருக்கு" என மீண்டும் நான் ஆரம்பிக்க, என் சட்டையை இழுத்து பிடித்து அருண் "என்ன டா தகுதி உனக்கு இல்ல??? நீயும் Aero படிக்கிற, NASA ல போய் சேர போற. உன்னால இந்தியாவுக்கே பெருமை சேர போகுது. இத விட வேற என்ன தகுதி உனக்கு வேணும்??? அந்தஸ்தா? டேய், நீ NASA க்கு போனதுக்கு அப்பறம் சந்தியா வீட்ல தான் அத பத்தி கவலை படனும். என்ன டா ஜாதி?? எங்க இருந்து வந்தது ஜாதி?? எந்த காலத்துலையோ மக்களே உருவாக்குனது டா.. நீ என்ன ஜாதி னு நான் உன்ன கேட்டிருப்பேனா? இல்ல நான் இந்த ஜாதின்னு நீ தான் பொருட்படுத்தி இருப்பியா??? அதெல்லாம் போன generation ஓட முடிஞ்சுது. நீ ஏன் அத பத்தி worry பண்ற???" என்றான்.

அருணுக்கு விளக்க முற்பட்டேன். "அருண், நமக்கு அந்த ஜாதி வேறுபாடு இல்ல. ஆனா சந்தியா parents அத எதிர்பார்ப்பாங்க இல்ல?? எங்க சொந்தபந்தங்கள பத்தி எனக்கு கவலை இல்ல. நாங்க கஷ்ட பட்டப்ப ஒருத்தனும் உதவிக்கு வரல. நான் படிக்கவே மாணிக்கவாசகர் அய்யா தான் உதவினார்." என்ற போது மீண்டும் என் கண்கள் கலங்கின.

"உன் கஷ்டம் எனக்கு தெரியும் டா. ஆனா இப்போ உன் நிலமை மாறிட்டு இருக்கு. நீ சீக்கிரம் நல்ல நிலைக்கு வர போற.." என்று என்னை தேற்றிய அருண் "நீ சொல்றதும் correct தான். அவங்க ஜாதி பாக்கலாம். ஆனா உன் தகுதி பல மடங்கு உயர்ந்திரும் NASA ல சேர்ந்ததும். சந்தியா அப்பாவுக்கு நல்ல தெரியும் NASA பத்தியும், உன் லட்சியத்த பத்தியும், நீ ஜெயிச்ச அப்பறம் அவரே உனக்கு பொண்ணு குடுக்க ஆசை படுவார். இப்ப நீ அத பத்தி எல்லாம் யோசிச்சு கவலை படாத. காலேஜ் life முடியபோகுது. இனி நம்ம கனவை நிறைவேதுற வேலை ய பாப்போம். சந்தியா உனக்கு தான். நீ வேணும்னா பாரு. ஒரு நாள் நீயும் சந்தியாவும் US போக போறீங்க. அந்த fight அ நான் தான் ஓட்ட போறேன்." என்ற அருணின் வார்த்தைகள் எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது. இந்த காதலை பற்றியெல்லாம் நினைக்காமல் முதலில் கனவை அடைய முடிவெடுத்தேன். மறுநாள் காலை கல்லூரியில் சந்தியாவை பார்த்தபோது எந்தவித தயக்கமும் இல்லை எனக்கு. அப்படி என் மனதை பக்குவப்படுத்தியது என் நண்பன் தான். எத்தனை பேருக்கு வாய்த்திடும் இப்படி ஒரு நண்பன்...???

தொடரும் கல்லூரியின் கடைசி நாட்கள்.....


என்றும் அன்புடன்,


இராஜராஜன்

No comments:

Post a Comment