Saturday, December 19, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-5

"என் பெயர் சந்தியா. என் சொந்த ஊர் திருச்சி, அனால் சென்னையில் குடியேறிவிட்டோம். அப்பா ஒரு மிக பெரிய லட்சியவாதி. AeroPro company இன் நிறுவனர். இந்தியாவின் civil and defense aviation sector க்கு தேவையான உபகரணங்களையும், மென்பொருள்களையும் எங்கள் நிறுவனம் தயாரித்து தருகிறது. Aircraft controller board designing and programming, Aircraft circuit designing, Aircraft Traffic control board development இல் பல நிறுவனங்கள் ஈடுபட்டு இருந்தாலும், இந்தியாவில் முதல் ஐந்து சிறந்த நிறுவனங்கள் மட்டுமே defense aviation sector உடன் ஒப்பந்தம் செய்து வேலை செய்கிறது. இதில் AeroPro வும் ஒன்று என்பதில் பெருமிதம் இருந்தாலும், தன் நிறுவனம் ஏரோ துறையில் இந்தியாவிலேயே முதலிடம் பிடிக்கவேண்டும் என்பது தான் என் அப்பாவின் கனவு. அவருக்கு தொழிலில் துணையாகவும், உதவியாகவும் இருப்பதற்காக என்னை இந்த கல்லூரியில் Aeronautical Engineering படிப்பில் சேரவைத்தார். Aeronautical Engineering முடித்தவுடன் MBA படித்துவிட்டு நிர்வாகத்தில் சேருவேன்." என்று சந்தியா தன் அறிமுகத்தை முடித்தாள். அவளை அனைவரும் கை தட்டி பாராட்டினர். அமைதியாக தன் இடத்திற்கு வந்து அமர்ந்தாள். அவள் முகத்தில் பெருமையும், தன்னம்பிக்கையும் தெரிந்தது.

பலரும் தங்கள் அறிமுகத்தை முடித்த பின், என்னை அறிமுக படுத்திக்கொள்ள சென்றேன். என் அறிமுகம் பலருக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். அதுமட்டுமின்றி சந்தியாவிடம் ஒரு நல்ல அவிப்ரயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வும் இருந்தது.

"என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. நேற்று வரை ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவை நான் பார்த்ததில்லை, ஆனால் நாளை
என் ஒவ்வொரு வேலை உணவும் NASA வில் தான் என்பதே என் லட்சியம்."
என்றதும் மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று என்னை பாராட்டினார்கள். ஆனால் என் பார்வையை சந்தியாவின் பக்கம் திருப்பியது என் மனம். சந்தியா என்னை பார்த்து மெதுவாக "All the best" என்றாள் தன் வலது கை கட்டைவிரலை உயர்த்தியபடி.

கல்லூரி நாட்கள் இனிமையாக செல்ல துவங்கியது. எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவாக துவங்கிய காலம் அது. என் இலட்சியத்தை நன்கு அறிந்த சந்தியா என் கனவை நிறைவேற்றும் பொறுப்பிலும் பங்கெடுக்க துவங்கினாள். ஒரு இலட்சியவாதியின் மகள் அல்லவா?? எங்கள் கல்லூரியின் ஆராய்ச்சிக் கூடத்தில் நடந்துகொண்டிருந்த பல ஆராய்ச்சிகளில் நான் பங்கெடுக்க ஆரம்பித்தேன். சரியான முறையில் என்னை வழிநடத்த இங்கும் எனக்கு ஒரு ஆசிரியர் கிடைத்தார். அவர் தான் பேராசிரியர் ஜான் அந்தோனி சார். எனது ஆற்றலையும், திறமையையும் அறிந்த அவர், தான் செய்துகொண்டிருந்த பல ஆராய்ச்சிகளில் என்னையும் ஈடுபடுத்தினார். நானும் அவரின் ஆராய்ச்சிகளுக்கு பேருதவியை இருந்தேன். எங்களது இணைப்பு இருவரது திறமையையும் மெருகேற்றிக்கொள்ள உதவியது.

கிருஷ்ணாவின் கடந்த கால நினைவுகளை கலைத்தது அவன் மேல் வந்து விழுந்த ஒரு volleyball. கடற்கரைகாற்று சற்று பலமாகவே வீசிற்று. விளையாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் கிருஷ்ணாவை நோக்கி ஓடிவந்தான். வந்தவன் கிருஷ்ணாவின் அருகில் வந்து "Sorry ண்ணா.. miss ஆய்டுச்சு" என்றான் வேகமாக மூச்சு விட்டபடி. "No Problem.. Carry on..!!" என்ற கிருஷ்ணா, volleyball ஐ கொடுத்தபடி பின்னோக்கி பார்த்தான் சந்தியாவை எதிர்பார்த்து. நேரம் கடந்துகொண்டே இருக்கிறது அனால் சந்தியா வருவதன் அறிகுறி கூட தெரியவில்லை. சந்தியா உறுதியாக வருவாள் என்பது கிருஷ்ணா நன்கு அறிந்தது தான் ஏனெனில் அத்தகைய முக்கியமான நாள் இன்று. அனால் தாமதம் ஏன் என்பது மட்டும் கிருஷ்ணாவிற்கு குழப்பமாகவே இருந்தது. சந்தியாவின் உண்மை நிலையை என்னவென்று அறியாத கிருஷ்ணா, சென்னை போக்குவரத்து நெரிசல் தான் தாமதத்திற்கு காரணமாக இருக்கும் என தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டு மீண்டும் இனிமையான கல்லுரி நாட்களை நினைக்க ஆரம்பித்தான் volleyball விளையாடுபவர்களை பார்த்தபடி.

என் கவனம் முழுவதும் படிப்பிலும், ஆராய்ச்சிகளிலும் இருந்தபோதும் என் மாலை நேரத்தை சந்தியவிர்க்காக ஒதுக்கி வைதிருந்தேன். என் மாலை நேர பொழுதுபோக்கு Basket Ball தான். சந்தியா Basket Ball court அருகில் அமர்ந்து என் ஆராய்ச்சி புத்தகங்களை புரட்டிக்கொண்டு என் விளையாட்டை பார்த்துக் கொண்டிருப்பாள். அருண் Basket Ball விளையாட்டில் பெரும் திறமைசாலி. அவன் சிறுவயதிலிருந்தே district level player. அவனுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனெனில் ஒரு துறையில், திறமை உடையவர்களுடன் பழகும்போது மட்டும் தான் அந்த துறையை முறையாகவும்,முழுவதுமாகவும் கற்றுக்கொள்ள முடியும். நாங்கள் விளையாடும்போது, அருண் மிகத் திறமையாக விளையாடினாலும் என் shoot ஐ மட்டும் பாராட்டும் சந்தியாவை அருண் பார்க்கும் பார்வை, கால் சிலம்புடன் கண்ணகி பாண்டிய மன்னனை பார்த்த பார்வைக்கு ஒப்பிடலாம்.

தொடரும் கல்லுரி நாட்கள்..........


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Saturday, December 5, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-4

சந்தியா!
என் தன்னம்பிக்கையின் பிறப்பிடம் சந்தியா.
நான் தவம் செய்யாமல் கிடைத்த வரம் சந்தியா.
என் கனவை தன் கனவாய் நினைத்தவள் சந்தியா.
என்னை வானம் அளவுக்கு உயர்த்த துடித்தவள் சந்தியா.
என் வாழ்வில் நட்ப்பாய் நுழைந்து உயிர்றாய் ஆனவள் சந்தியா.

நான் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வினையும், பொறியியல் கல்லூரிக்கான நுழைவு தேர்வினையும் சிறப்பாக எழுதி முடித்தேன். தமிழகத்தின் தலைசிறந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் (Aeronautical Engineering) கல்லுரியான ஸ்ரீ சுப்பிரமணியம் கல்லுரியில் (Sri Subramaniyam College of Aeronautics and Applied Sciences) சேர திட்டமிட்டிருந்தேன். அனுபவமிக்க விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும், எண்ணற்ற புத்தகங்களை கொண்ட நுலகமும் அந்த கல்லுரியின் சிறப்பு. அது மட்டுமின்றி என்னை ஈர்த்த மற்றொரு சிறப்பம்சம் அக்கல்லுரி ராக்கெட் தொழிற்நுட்பத்தில் பல ஆராய்ச்சிகளை செய்துகொண்டிருந்தது. என் விருப்பம்போல் அதேகல்லுரியில் எனக்கு இடம் கிடைத்தது. மாணிக்கவாசகம் அய்யா தன் நண்பரது டிரஸ்ட் (trust) மூலம் எனக்கு ஸ்காலர்ஷிப் (scholarship) பெற்று தந்தார். பல பல எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிக்குள் நுழைந்தேன். நான் எதிர்பாராத ஒன்று சந்தியாவின் சந்திப்பு. எங்கள் முதல் சந்திப்பே என்னை தர்மசங்கடத்தில் நிறுத்தியது, ஆனால் அதன்பிறகு எங்களது ஒவ்வொரு சந்திப்பும் இனிமையானதாகவே அமைந்தது.

என் கல்லூரி கோவை மாநகரில் அமைந்திருந்ததால் நான் கல்லுரி விடுதியில் சேர்ந்து படிக்கவேண்டி இருந்தது. என் அறையில் என்னுடன் அருண் (என் சகமாணவன்) தங்கி இருந்தான். அருணின் அப்பா ஒரு விமானி (Pilot) என்பதால் அருணின் ஆர்வம் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் மீது இருந்தது. சென்னையில் இருந்து வந்த அருணும் என்னை போல் ஒரு லட்சியவாதி தான். நாங்கள் முதல் நாளிலேயே நண்பர்கள் ஆகிவிட்டோம். நாங்கள் இருவரும் வகுப்பறையில் ஒன்றாகவே அமர்ந்திருப்போம்.

கல்லூரியில் சேர்ந்து மூன்றாவது நாள், மதிய உணவுக்குப்பின் வகுப்பறையில் நான் தனியாக அமர்ந்திருந்தேன். அருணுக்காக காத்திருந்தேன். என் சிந்தனை என் சிறுவயது நாட்களை நினவுபடுதிக்கொண்டு இருந்தது. கையில் புத்தகத்துடன், வெண்பட்டு புடவை அணிந்து, வேகமாக வகுப்பறையில் நுழைந்த சந்தியாவை பார்த்ததும் ஆசிரியை என்று நினைத்து சட்டென எழுந்து "Good Afternoon" மேடம் என்றேன். என்னைக்கண்டதும் சந்தியாவிற்கு கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு. மூச்சை உள்ளே இழுக்க கூட மறந்து சிரித்துக்கொண்டிருந்தாள். தர்மசங்கடத்தில் நின்று கொண்டிருந்த என் நிலையை உடனே புரிந்துகொண்ட சந்தியா
"I'm really sorry. நான் எதிர்பாக்காம நீங்க அப்படி சொன்னதும் ம்ம்ம்ம்ம்.......
sorry. sorry. Please don't take it to your heart. By the by I'm Sandhiya" என்றாள் தன் கையை நீட்டியபடி. அவளது இனிமையான குரலையும், கனிவான பேச்சையும் கண்டு வியந்தவண்ணம் "I'm Krishna" என்று கூறி என் கையை மெல்ல உயர்த்தி கை குலுக்கினேன். நண்பர்களுக்கு என்றும் ஒரு சிறப்பு உண்டு. நாகரிகமாக சொல்ல வேண்டுமென்றால் "சரியான நேரத்தில் நம்மை வந்தடைவார்கள்." அருண் மட்டும் விதிவிலக்கா?? எங்கள் கைகள் பிரிவதற்குள் வகுப்பினுள் நுழைந்தான். அருண் எங்களை பார்த்ததும் சந்தியா "catch you later, bye" என்று கூறி அவள் இருக்கைக்கு சென்றாள். அருண் கண்ணில் நெருப்புடன் என்னை பார்த்த பார்வை இதற்குமுன் நான் திரைபடத்தில் மட்டுமே பார்த்தது. என் அருகில் வந்து அமர்ந்த அருண் "டேய் மச்சான்!! காலேஜ் ல சேர்ந்து 2 நாள் தாண்டா ஆச்சு. அதுக்குள்ளயேவா?? எப்படி டா??" என்றான். அவனது ஆச்சர்யத்தை மேலும் வலுபடுத்தவும், என் தர்மசங்கடத்தை மறைத்துவிடவும் ஒருகணம் யோசித்து "Just like that டா!!!" என்று அமைதியாக அமர்ந்துகொண்டேன் மனதுக்குள் சிரித்தபடி. மீண்டும் என்னை முறைத்து பார்த்து அருண் "டேய்.. அது கூட பரவால. ஆனா, நான் வந்ததும் அவள எதுக்குடா போக சொன்ன?? துரோகி." என்றான். சந்தியாவிற்கு வந்ததை போல எனக்கும் சிரிப்பு. என் கையை அருண் தோளில் வைத்து "விடு டா! அப்பறம் intro குடுக்கறேன்" என்றேன்.

கல்லூரியில் சேர்ந்து 1 வாரம் தான் முடிந்திருந்தது. சகமாணவர்களுடன் அதிகம் அறிமுகமும் இல்லை, பரிட்சயமும் இல்லை. எனக்கு தெரிந்த இருவர் அருண் மற்றும் சந்தியா. எங்களை அறிமுகபடுத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்ப்பட்டது. எங்களுக்கு "Personality Development" என்ற ஒரு வகுப்பு இருந்தது. எங்களை நாங்களே அறிமுகபடுத்தி எங்களை பற்றி 5 நிமிடம் பேசவேண்டும். என்னை பற்றியும் என்கனவை பற்றியும் அனைவரிடமும் கூறி அவர்களுக்கும் லட்சிய பாதையை காட்டவேண்டும் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்தது. அது மட்டுமின்றி சந்தியாவை பற்றி நான் தெரிந்துக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது.

முதலில் சந்தியா தன்னை அறிமுகபடுத்திக்கொள்ள வகுப்பறையின் மத்தியில் சென்று நின்றாள். தன் மூச்சை நன்கு இழுத்து தன் பேச்சை துவங்கினாள்.


தொடரும் அறிமுகம்......


என்றும் அன்புடன்,
இராஜராஜன்