Saturday, December 18, 2010

ஒரு லட்சியவாதியின் காதல் கதை - அத்யாயம்-10

என்ன ஒரு ஆனந்தம்...!!!!
என்ன ஒரு பரவசம்...!!!!
மகிழ்ச்சியின் உச்சத்தையே தொட்டுவிட்டதாய் ஓர் அற்புத உணர்வு.

இத்தனை நாள் என்னை காயப்படுத்திக்கொண்டு இருந்த என் உணர்வுகள், என்னை காற்றில் பறக்கச் செய்தது. கனவாய் களைந்து போகும் என்றிருந்த ஒன்றே இன்று கைசேர்ந்தது. அப்படியிருக்க, என் மூச்சாய் இருக்கும் லட்சியம் என்ன கிடைக்காமலா போய்விடும் என்ற ஓர் புது எண்ணம் என் தன்னம்பிக்கைக்கு வழு சேர்த்தது.

"சந்தியா..!! இது காலேஜ். முதல்ல அத கவனி. தப்பா நினைக்காத. மத்தவங்க தப்பா நினைக்கறதுக்குள்ள கொஞ்சம் விலகிக்கோ."

சூழ்நிலையை உணர்ந்த சந்தியாவும் சற்று நகர்ந்து அமர்ந்தாள். ஆனாலும் இருக்கப்பற்றிய என் கையை அவள் விடவில்லை. உனக்கான நேரத்தையும் இடத்தையும் விரைவிலேயே தருவேன் என்று என் பார்வையிலேயே அவளுக்கு உணர்த்தினேன்.

"சந்தியா..!! இத... இந்த காதல... உன்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியாம நான் பட்ட வேதனை எனக்கும் அருணுக்கும் தான் தெரியும். நீ என்ன தப்பா நெனச்சு விலகிட்டா என்ன பண்றதுன்னு நான் பயந்த உணர்வு, எனக்கு மட்டும் தான் தெரியும். என் வாழ்க்கைல ஒரு பொண்ணுனா, அது நீ மட்டும் தான். என்ன மட்டும் காதலிக்காம என் இலட்சியத்தையும் நீ நேசிச்ச பாரு, அந்த எண்ணத்துக்கு என்னை தவிர வேற என்ன தர முடியும் என்னால???" என்றதும் என்னை பார்த்த சந்தியா "இது ஏதோ சினிமா டயலாக் மாறி தெரியுதே.!!" என்று சிரித்தாள்.

"அருணுக்கு தெரியுமா இது??" என்றாள் ஆச்சரியமாக.
"ஊருக்கே தெரிஞ்சிருக்கு இத பத்தி. ஆனா நம்ம தான் பேசிக்கவே இல்ல." என்றதும் சட்டென்று சிரித்த சந்தியா "இத வெளிபடுத்த நாலு வருஷம் தேவ பட்டிருக்கு நமக்கு." என்று கூறி மீண்டும் சிரித்தாள். கள்ளம் கபடமின்றி சிரித்துக்கொண்டு இருக்கும் சந்தியாவை பார்த்துக்கொண்டே இருந்தேன். என் வாழ்வை அழகாக்கப் போகிறவள் அல்லவா...... இல்லை இல்லை..... அழகாக்கிக்கொண்டிருப்பவள் அல்லவா. அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த என்னை கவனித்த சந்தியா "எப்ப டா என்ன கல்யாணம் பண்ணிக்க போற???" என்றாள் ஏக்கமாக. சில நிமிடம் மௌனமாக இருந்து யோசித்தேன். என் சிந்தனைக்கு வழி வகுத்து சந்தியாவும் இதையே யோசித்துக்கொண்டிருந்தாள்.

"செப்டம்பர் ல interview. நிச்சயம் நான் select ஆயிடுவேன். டிசம்பர் ல joining. போய் 1.5 வருஷம் எப்படி இருக்குனு பாக்கறேன். அப்பறம் வந்து marriage பண்ணிக்கறேன். நீயும் MBA முடிக்கணும் இல்ல.??" என்றதும் ஏக்கமாக பார்த்த சந்தியா "அவளோ நாளா????... ம்..... நீயும் settle ஆகணும்ல.... correct தான்... நான் ஒன்னும் MBA concentrate பண்ணி படிக்கப்போறது இல்ல. எப்படியும் நீ marriage முடிஞ்சதும் என்ன US கூட்டிட்டு போய்டுவ... அப்பறம் என்ன...??? அப்பா தான் பாவம். நான் MBA முடிச்சு அவருக்கு business ல help அ இருப்பேன்னு நம்பிட்டு இருக்கார். இது மட்டும் அவருக்கு தெரிஞ்சுது, அப்பறம் அவருக்கு 2nd heart attack ஏ வந்திடும்." என்று சிரித்தாள். காதலை பரிமாறிக்கொண்ட நிறைவு இருவருக்கும். சிரித்துக்கொண்டே இருந்தோம் வெகு நேரம்.

அருண் வருவதை பார்த்த சந்தியா, மெல்ல தன்கையை என் கைமேல் இருந்து எடுத்துக்கொண்டாள். "வந்துட்டாண்டா வில்லன். கொஞ்ச நேரம் தனியா விடறானா பாரு உன் friend." என்று சலித்துக்கொண்டாள் சந்தியா. கையில் paper உடன் வந்த அருண் எங்கள் முகத்தில் தெரிந்த தெளிவையும் மகிழ்ச்சியையும் பார்த்துக் கேட்டான் "என்ன டா... ரெண்டு பேர் face உம் ரொம்ப bright அ இருக்கு... நான் போயிட்டு வந்த gap ல என்ன நடந்தது.???? உண்மை ய சொல்லு..." இருநொடி மௌனத்திற்கு பிறகு மீண்டும்... "ரெண்டு பேரும் full plate chicken briyani வாங்கி செமகட்டு கட்டுன மாறி தெரியுதே..." என்றான் அருண். மூவரும் சிரித்துவிட்டோம்...

மீண்டும் ஒரு சிறு இடைவெளியில் அருண் "நான் இல்லாத நேரம் உங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.?? ம்.... இருக்கட்டும்.... ஆமா சந்தியா... ஏதோ பெருசா சாதிச்ச மாறி தெரிற.. என்ன விஷயம்????" என்றான். லேசாக அருணை முறைத்து பார்த்து சிரித்தாள் சந்தியா. அருண் என்னை பார்த்து "மச்சான்..!! நீ கூட வெக்கப்படற மாறி தெரியுதே..!!!" என்றான். வேகமாக நான் எழுவதை பார்த்து ஓட ஆரம்பித்தான் அங்கிருந்து. நானும் அவனை துரத்த... சந்தியாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு. மனம் விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக ஓடிக்கொண்டிருந்த அருண், சந்தியா அருகே சென்று paper ஐ அவளிடம் கொடுத்துவிட்டு basket ball court இன் ஓரத்தில் இருந்த பந்தை எடுத்துக்கொண்டு ஓட, நானும் அவனிடம் இருந்து பந்தை பறித்து shoot செய்ய... சந்தியா எழுந்து நின்று கை தட்டினாள். அருணுக்கு வந்ததே கோவம். பந்தை எடுத்துக் கொண்டு வந்த என் கையில் இருந்த அதை தள்ளி விட்டு, என் கழுதை பிடித்து நெருக்கினான் விளையாட்டாக. அதை கண்ட சந்தியா, அருகில் இருந்த கல் ஒன்றை எடுத்து அருணை தாக்க ஓடி வந்தாள்.

சந்தியாவை பார்த்த அருண் என் பின்னால் ஒளிந்துகொண்டான். சந்தியாவின் கையில் இருந்த கல்லை நான் பிடுங்கிக்கொள்ள, அருண் "டேய்.. உன் உயர் நண்பனோட உயிருக்கே ஆபத்து வருது பாரு.. நான் சொன்னேன்ல. சந்தியா உன்மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்கானு பாரு." என்றான். "ஆமாம் டா... அவ என்மேல உயிரையே வெச்சிருக்கா. இப்ப தான் அத என்கிட்ட சொன்னாள்."

என் தோளில் கை வைத்து அணைத்தபடி அருண் கூறினான் "இதுக்காக தான் உங்கள தனியா விட்டுட்டு சார் கூட போனேன். anyway Congrats..!!!" சந்தியா முகத்தில் வெக்கம் கலந்த சிரிப்பு. அருண் என்னை அணைத்து நின்றுகொண்டிருப்பது சந்தியாவிற்கு பொறாமையை கிளப்பியது. பெண்களுக்கே உரித்தான குணம் அல்லவா அது. அருணை முறைத்துப் பார்த்து சொன்னாள் "சரி.. சரி... உயிர் நண்பன்னு சொல்லி, எங்க marriage க்கு அப்பறம் அடிகடி வீட்டுக்கு வந்து எங்க உயிரை எடுக்காத....". இதை கேட்ட அருண் சிரித்துக்கொண்டே சொன்னான் "நான் ஏன் உங்க வீட்டுக்கு வரேன்.?? நீங்க US ல ஒரே இடத்துல்ல தான் இருக்கணும். ஆனா நான் உலகம் full அ பறந்துட்டு இருப்பேன்."

நேரம் ஆனது. விடைபெறும் தருவாயும் வந்தது. மூவரும் மீண்டும் அமர்ந்தோம். "மச்சான்.. உனக்கு செப்டம்பர் ல தான interview. அதுவரைக்கும் என்ன பண்ணபோற.???" என்றான் அருண். "நான் ஊருக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு. அம்மா அப்பா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு அப்பறம் சென்னை வரேன்" என்றேன். "டேய்.. pilot training time ல நான் அங்க தான் தங்கணும். week-end தான் வீட்டுக்கு வர முடியும். so நீ என் relative ரூம்ல தங்கிக்க. அவன் ஊர்ல இருந்து சென்னைக்கு படிக்க வந்திருக்கான். தனியா தான் தங்கி இருக்கான்." என்றான் அருண். சரி என்று நானும் சம்மதித்தேன். மீண்டும் சந்திக்கும் நாளை முடிவு செய்துவிட்டு மூவரும் விடை பெற்றோம்.

எனக்கு உயிரான காதலியும் இருக்கிறாள், சிறந்த நண்பனும் இருக்கிறான், மிகச்சிறந்த வேலையும் கிடைக்கப்போகிறது. என்னை விட அதிர்ஷ்டசாலி வேறு யார் இருக்க முடியும் என்ற எண்ணம் எனக்குள் கர்வத்தை புகுத்தியது. சிறுவயதில் கண்ணுக்கு தெரிந்த பிரச்சனைகள் அனைத்தும் மறைந்துகொண்டே போவதை நன்றாக என்னால் உணர முடிந்தது.
பெருமிதத்தில் நான் நடக்க ஆரம்பித்தேன்.

தொடரும் இளைப்பாறிய நாட்கள்....

என்றும் அன்புடன்,
இராஜராஜன்

No comments:

Post a Comment