Saturday, December 5, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-4

சந்தியா!
என் தன்னம்பிக்கையின் பிறப்பிடம் சந்தியா.
நான் தவம் செய்யாமல் கிடைத்த வரம் சந்தியா.
என் கனவை தன் கனவாய் நினைத்தவள் சந்தியா.
என்னை வானம் அளவுக்கு உயர்த்த துடித்தவள் சந்தியா.
என் வாழ்வில் நட்ப்பாய் நுழைந்து உயிர்றாய் ஆனவள் சந்தியா.

நான் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வினையும், பொறியியல் கல்லூரிக்கான நுழைவு தேர்வினையும் சிறப்பாக எழுதி முடித்தேன். தமிழகத்தின் தலைசிறந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் (Aeronautical Engineering) கல்லுரியான ஸ்ரீ சுப்பிரமணியம் கல்லுரியில் (Sri Subramaniyam College of Aeronautics and Applied Sciences) சேர திட்டமிட்டிருந்தேன். அனுபவமிக்க விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும், எண்ணற்ற புத்தகங்களை கொண்ட நுலகமும் அந்த கல்லுரியின் சிறப்பு. அது மட்டுமின்றி என்னை ஈர்த்த மற்றொரு சிறப்பம்சம் அக்கல்லுரி ராக்கெட் தொழிற்நுட்பத்தில் பல ஆராய்ச்சிகளை செய்துகொண்டிருந்தது. என் விருப்பம்போல் அதேகல்லுரியில் எனக்கு இடம் கிடைத்தது. மாணிக்கவாசகம் அய்யா தன் நண்பரது டிரஸ்ட் (trust) மூலம் எனக்கு ஸ்காலர்ஷிப் (scholarship) பெற்று தந்தார். பல பல எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிக்குள் நுழைந்தேன். நான் எதிர்பாராத ஒன்று சந்தியாவின் சந்திப்பு. எங்கள் முதல் சந்திப்பே என்னை தர்மசங்கடத்தில் நிறுத்தியது, ஆனால் அதன்பிறகு எங்களது ஒவ்வொரு சந்திப்பும் இனிமையானதாகவே அமைந்தது.

என் கல்லூரி கோவை மாநகரில் அமைந்திருந்ததால் நான் கல்லுரி விடுதியில் சேர்ந்து படிக்கவேண்டி இருந்தது. என் அறையில் என்னுடன் அருண் (என் சகமாணவன்) தங்கி இருந்தான். அருணின் அப்பா ஒரு விமானி (Pilot) என்பதால் அருணின் ஆர்வம் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் மீது இருந்தது. சென்னையில் இருந்து வந்த அருணும் என்னை போல் ஒரு லட்சியவாதி தான். நாங்கள் முதல் நாளிலேயே நண்பர்கள் ஆகிவிட்டோம். நாங்கள் இருவரும் வகுப்பறையில் ஒன்றாகவே அமர்ந்திருப்போம்.

கல்லூரியில் சேர்ந்து மூன்றாவது நாள், மதிய உணவுக்குப்பின் வகுப்பறையில் நான் தனியாக அமர்ந்திருந்தேன். அருணுக்காக காத்திருந்தேன். என் சிந்தனை என் சிறுவயது நாட்களை நினவுபடுதிக்கொண்டு இருந்தது. கையில் புத்தகத்துடன், வெண்பட்டு புடவை அணிந்து, வேகமாக வகுப்பறையில் நுழைந்த சந்தியாவை பார்த்ததும் ஆசிரியை என்று நினைத்து சட்டென எழுந்து "Good Afternoon" மேடம் என்றேன். என்னைக்கண்டதும் சந்தியாவிற்கு கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு. மூச்சை உள்ளே இழுக்க கூட மறந்து சிரித்துக்கொண்டிருந்தாள். தர்மசங்கடத்தில் நின்று கொண்டிருந்த என் நிலையை உடனே புரிந்துகொண்ட சந்தியா
"I'm really sorry. நான் எதிர்பாக்காம நீங்க அப்படி சொன்னதும் ம்ம்ம்ம்ம்.......
sorry. sorry. Please don't take it to your heart. By the by I'm Sandhiya" என்றாள் தன் கையை நீட்டியபடி. அவளது இனிமையான குரலையும், கனிவான பேச்சையும் கண்டு வியந்தவண்ணம் "I'm Krishna" என்று கூறி என் கையை மெல்ல உயர்த்தி கை குலுக்கினேன். நண்பர்களுக்கு என்றும் ஒரு சிறப்பு உண்டு. நாகரிகமாக சொல்ல வேண்டுமென்றால் "சரியான நேரத்தில் நம்மை வந்தடைவார்கள்." அருண் மட்டும் விதிவிலக்கா?? எங்கள் கைகள் பிரிவதற்குள் வகுப்பினுள் நுழைந்தான். அருண் எங்களை பார்த்ததும் சந்தியா "catch you later, bye" என்று கூறி அவள் இருக்கைக்கு சென்றாள். அருண் கண்ணில் நெருப்புடன் என்னை பார்த்த பார்வை இதற்குமுன் நான் திரைபடத்தில் மட்டுமே பார்த்தது. என் அருகில் வந்து அமர்ந்த அருண் "டேய் மச்சான்!! காலேஜ் ல சேர்ந்து 2 நாள் தாண்டா ஆச்சு. அதுக்குள்ளயேவா?? எப்படி டா??" என்றான். அவனது ஆச்சர்யத்தை மேலும் வலுபடுத்தவும், என் தர்மசங்கடத்தை மறைத்துவிடவும் ஒருகணம் யோசித்து "Just like that டா!!!" என்று அமைதியாக அமர்ந்துகொண்டேன் மனதுக்குள் சிரித்தபடி. மீண்டும் என்னை முறைத்து பார்த்து அருண் "டேய்.. அது கூட பரவால. ஆனா, நான் வந்ததும் அவள எதுக்குடா போக சொன்ன?? துரோகி." என்றான். சந்தியாவிற்கு வந்ததை போல எனக்கும் சிரிப்பு. என் கையை அருண் தோளில் வைத்து "விடு டா! அப்பறம் intro குடுக்கறேன்" என்றேன்.

கல்லூரியில் சேர்ந்து 1 வாரம் தான் முடிந்திருந்தது. சகமாணவர்களுடன் அதிகம் அறிமுகமும் இல்லை, பரிட்சயமும் இல்லை. எனக்கு தெரிந்த இருவர் அருண் மற்றும் சந்தியா. எங்களை அறிமுகபடுத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்ப்பட்டது. எங்களுக்கு "Personality Development" என்ற ஒரு வகுப்பு இருந்தது. எங்களை நாங்களே அறிமுகபடுத்தி எங்களை பற்றி 5 நிமிடம் பேசவேண்டும். என்னை பற்றியும் என்கனவை பற்றியும் அனைவரிடமும் கூறி அவர்களுக்கும் லட்சிய பாதையை காட்டவேண்டும் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்தது. அது மட்டுமின்றி சந்தியாவை பற்றி நான் தெரிந்துக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது.

முதலில் சந்தியா தன்னை அறிமுகபடுத்திக்கொள்ள வகுப்பறையின் மத்தியில் சென்று நின்றாள். தன் மூச்சை நன்கு இழுத்து தன் பேச்சை துவங்கினாள்.


தொடரும் அறிமுகம்......


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

1 comment:

  1. நல்லாருக்கு, ஆனா இன்னும் கொஞ்சம் fine tuning பண்ணி எழுது..
    கதை மாதிரி இல்லாம, கொஞ்சம் போரடிக்குது..

    ReplyDelete