Saturday, December 19, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-5

"என் பெயர் சந்தியா. என் சொந்த ஊர் திருச்சி, அனால் சென்னையில் குடியேறிவிட்டோம். அப்பா ஒரு மிக பெரிய லட்சியவாதி. AeroPro company இன் நிறுவனர். இந்தியாவின் civil and defense aviation sector க்கு தேவையான உபகரணங்களையும், மென்பொருள்களையும் எங்கள் நிறுவனம் தயாரித்து தருகிறது. Aircraft controller board designing and programming, Aircraft circuit designing, Aircraft Traffic control board development இல் பல நிறுவனங்கள் ஈடுபட்டு இருந்தாலும், இந்தியாவில் முதல் ஐந்து சிறந்த நிறுவனங்கள் மட்டுமே defense aviation sector உடன் ஒப்பந்தம் செய்து வேலை செய்கிறது. இதில் AeroPro வும் ஒன்று என்பதில் பெருமிதம் இருந்தாலும், தன் நிறுவனம் ஏரோ துறையில் இந்தியாவிலேயே முதலிடம் பிடிக்கவேண்டும் என்பது தான் என் அப்பாவின் கனவு. அவருக்கு தொழிலில் துணையாகவும், உதவியாகவும் இருப்பதற்காக என்னை இந்த கல்லூரியில் Aeronautical Engineering படிப்பில் சேரவைத்தார். Aeronautical Engineering முடித்தவுடன் MBA படித்துவிட்டு நிர்வாகத்தில் சேருவேன்." என்று சந்தியா தன் அறிமுகத்தை முடித்தாள். அவளை அனைவரும் கை தட்டி பாராட்டினர். அமைதியாக தன் இடத்திற்கு வந்து அமர்ந்தாள். அவள் முகத்தில் பெருமையும், தன்னம்பிக்கையும் தெரிந்தது.

பலரும் தங்கள் அறிமுகத்தை முடித்த பின், என்னை அறிமுக படுத்திக்கொள்ள சென்றேன். என் அறிமுகம் பலருக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். அதுமட்டுமின்றி சந்தியாவிடம் ஒரு நல்ல அவிப்ரயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வும் இருந்தது.

"என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. நேற்று வரை ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவை நான் பார்த்ததில்லை, ஆனால் நாளை
என் ஒவ்வொரு வேலை உணவும் NASA வில் தான் என்பதே என் லட்சியம்."
என்றதும் மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று என்னை பாராட்டினார்கள். ஆனால் என் பார்வையை சந்தியாவின் பக்கம் திருப்பியது என் மனம். சந்தியா என்னை பார்த்து மெதுவாக "All the best" என்றாள் தன் வலது கை கட்டைவிரலை உயர்த்தியபடி.

கல்லூரி நாட்கள் இனிமையாக செல்ல துவங்கியது. எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவாக துவங்கிய காலம் அது. என் இலட்சியத்தை நன்கு அறிந்த சந்தியா என் கனவை நிறைவேற்றும் பொறுப்பிலும் பங்கெடுக்க துவங்கினாள். ஒரு இலட்சியவாதியின் மகள் அல்லவா?? எங்கள் கல்லூரியின் ஆராய்ச்சிக் கூடத்தில் நடந்துகொண்டிருந்த பல ஆராய்ச்சிகளில் நான் பங்கெடுக்க ஆரம்பித்தேன். சரியான முறையில் என்னை வழிநடத்த இங்கும் எனக்கு ஒரு ஆசிரியர் கிடைத்தார். அவர் தான் பேராசிரியர் ஜான் அந்தோனி சார். எனது ஆற்றலையும், திறமையையும் அறிந்த அவர், தான் செய்துகொண்டிருந்த பல ஆராய்ச்சிகளில் என்னையும் ஈடுபடுத்தினார். நானும் அவரின் ஆராய்ச்சிகளுக்கு பேருதவியை இருந்தேன். எங்களது இணைப்பு இருவரது திறமையையும் மெருகேற்றிக்கொள்ள உதவியது.

கிருஷ்ணாவின் கடந்த கால நினைவுகளை கலைத்தது அவன் மேல் வந்து விழுந்த ஒரு volleyball. கடற்கரைகாற்று சற்று பலமாகவே வீசிற்று. விளையாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் கிருஷ்ணாவை நோக்கி ஓடிவந்தான். வந்தவன் கிருஷ்ணாவின் அருகில் வந்து "Sorry ண்ணா.. miss ஆய்டுச்சு" என்றான் வேகமாக மூச்சு விட்டபடி. "No Problem.. Carry on..!!" என்ற கிருஷ்ணா, volleyball ஐ கொடுத்தபடி பின்னோக்கி பார்த்தான் சந்தியாவை எதிர்பார்த்து. நேரம் கடந்துகொண்டே இருக்கிறது அனால் சந்தியா வருவதன் அறிகுறி கூட தெரியவில்லை. சந்தியா உறுதியாக வருவாள் என்பது கிருஷ்ணா நன்கு அறிந்தது தான் ஏனெனில் அத்தகைய முக்கியமான நாள் இன்று. அனால் தாமதம் ஏன் என்பது மட்டும் கிருஷ்ணாவிற்கு குழப்பமாகவே இருந்தது. சந்தியாவின் உண்மை நிலையை என்னவென்று அறியாத கிருஷ்ணா, சென்னை போக்குவரத்து நெரிசல் தான் தாமதத்திற்கு காரணமாக இருக்கும் என தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டு மீண்டும் இனிமையான கல்லுரி நாட்களை நினைக்க ஆரம்பித்தான் volleyball விளையாடுபவர்களை பார்த்தபடி.

என் கவனம் முழுவதும் படிப்பிலும், ஆராய்ச்சிகளிலும் இருந்தபோதும் என் மாலை நேரத்தை சந்தியவிர்க்காக ஒதுக்கி வைதிருந்தேன். என் மாலை நேர பொழுதுபோக்கு Basket Ball தான். சந்தியா Basket Ball court அருகில் அமர்ந்து என் ஆராய்ச்சி புத்தகங்களை புரட்டிக்கொண்டு என் விளையாட்டை பார்த்துக் கொண்டிருப்பாள். அருண் Basket Ball விளையாட்டில் பெரும் திறமைசாலி. அவன் சிறுவயதிலிருந்தே district level player. அவனுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனெனில் ஒரு துறையில், திறமை உடையவர்களுடன் பழகும்போது மட்டும் தான் அந்த துறையை முறையாகவும்,முழுவதுமாகவும் கற்றுக்கொள்ள முடியும். நாங்கள் விளையாடும்போது, அருண் மிகத் திறமையாக விளையாடினாலும் என் shoot ஐ மட்டும் பாராட்டும் சந்தியாவை அருண் பார்க்கும் பார்வை, கால் சிலம்புடன் கண்ணகி பாண்டிய மன்னனை பார்த்த பார்வைக்கு ஒப்பிடலாம்.

தொடரும் கல்லுரி நாட்கள்..........


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

1 comment:

  1. நல்லா இருக்கு ராஜா தொடர்ந்து எழுது...

    ReplyDelete