Sunday, November 1, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-1

தமிழகத்தின் தலைநகரமான சிங்காரச் சென்னையின் பெருமையாம் மெரினா கடற்கரையின் மணலை மெல்ல கையில் எடுத்து திரும்ப கடற்கரையில் தூவிக்கொண்டிருந்தான் கிருஷ்ணமூர்த்தி கருப்பசாமி. Dark blue pant , light blue shirt, shoe, tie, சீர செய்யப்பட்ட தலைமுடி என ஒரு மென்பொருள் பொறியாளன் போல தோற்றமளிக்கும் கிருஷ்ணாவின் முகத்தில் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் புன்னகை. தன்னம்பிக்கை தெறிக்கும் அவனது கண்கள் யாரையோ தேடியவண்ணம் இருந்தது. எதிர்பார்ப்பும், படபடப்புடன் இனைந்து கொண்ட அவனது பார்வை நிமிடத்துக்கு பலமுறை கை கடிகாரத்தை பார்வையிட்டுக்கொண்டே இருந்தது. நொடிகள் செல்வது யுகம் போல உணர்ந்த கிருஷ்ணா, அருகில் இருந்த பையில் இருந்து ஒரு blue color file ஐ எடுத்து மெல்ல அதை புரட்ட துவங்கினான். அந்த file ல் அவனின் certificates தான் இருக்கும் என்று எவராலும் எளிதில் யூகிக்க முடியும். அவன் கை பக்கங்களை புரட்ட அவன் என்னமோ தான் கடந்துவந்த பாதையை புரட்ட ஆரம்பித்தது.

கரிசல்காட்டு கிராமத்து எளிழிளில் திரிந்த காலம்,
வயல் வரப்புகளில் வியர்வை வழிய உழைத்த காலம்,
மழை ஒழுகும் கூரையை மறைக்க முடியாமல் தவித்த காலம், கனவுகளை சுமந்துகொண்டு; கவலைகளை மறந்து கல்வியை மட்டும் தேடிய காலம்,
கால்நடையாய் பள்ளிக்கு சென்ற காலம்,
தெருவிளக்கின் வெளிச்சத்தில் படித்த காலம்,
தன்னம்பிக்கையுடன் லட்சியத்தை சேர்த்து விடியலுக்காக காத்திருந்த காலம்,
நூலகம் மட்டுமே உலகமென நினைத்திருந்த காலம்,
காகிதத்தில் rocket விட்டு விழையாடும் நண்பர்கள் மத்தியில்; rocket தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்தி புரட்சி செய்ய துடித்த காலம்,.......

ஒரு சாதாரண கிராமத்தில் சாதாரண கூலி தொழிலாளியின் மகனாக பிறந்தபோதும், வறுமை பிடியின் மடியில் தவல்ந்தபோதும், ஏழை சமுதாய மக்களின் உழைப்பினால் வழியும் வியர்வைத்துளியின் உன்னதத்தை உணரும்போதும், என் கனவு என் கிராமத்தை பெருமைப்படுத்தும் என்ற நம்பிக்கை மனதில் ஒலிக்கும்போதும், வெற்றிபெற துடிக்கும் இதயம் பலம பெருக செய்தவர் மாணிக்கவாசகம் அய்யா. என் அறிவியல் ஆசரியர். "என்னால் சாதிக்க முடியாத சாதனையை நீ சாதிப்பாய்" என்று எனக்கு ஊக்கம் தந்த அவர்தான் என் உயரிய கனவுக்கு சொந்தக்காரர்.

என் 5 வயதில், காகித rocket எப்படி பறக்கிறது என்று அவரைப்பார்த்து கேட்ட நாள் இன்றும் என் மனதில் அப்படியே பசுமையாக இருக்கிறது. காகித rocket ஐ வியந்து பார்த்த என்னை rocket ஐ வடிவமைக்கும் வல்லுனராக மாற்ற அவர் பட்ட சிரமங்கள்தான் என்னென்ன.
ஏழ்மையின் உச்சத்தில் இருந்த என் குடும்பத்தின் ஒரே நம்பிக்கை நான் தான். எங்கள் வருமானம் இருவேளை உணவுக்கு கூட போதாதநிலை. கந்தல் ஆடை, இலவச பாட புத்தகம், மதிய சத்துணவு, ஏழுதி படிக்க slate, தெருவிளக்கு வெளிச்சம் என இப்படி தான் என் கல்வி ஆரம்பித்தது.

மாணிக்கவாசகம் அய்யா என்னையும் என் பொருளாதர நிலையையும் நன்கே அறிவார். அவர் என்னிடம் அடிக்கடி ஒன்றை கூறுவார். "நாளைக்கு ஜெய்க்கணும்னா இன்னைக்கு கஷ்ட்டபட்டுதான் ஆகணும்" .
இன்னைக்கும் என்னை உற்சாகபடுதுற வார்த்தை அவர் சொன்னது தான்.

பள்ளியில் சேர்ந்த சில நாட்களிலேயே என் அறிவியல் திறனை கண்டு அதை மேன்படுத்த ஆரம்பித்தார். என்னை rocket designer ஆக்க விரும்பினார். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேருவதை மட்டுமே லட்சியமாக வைக்க சொன்னார். என் லட்சியம் 5 வயதில் முடிவானது. இன்று 21 ஆண்டுகள் கழித்து அது நிறைவேற போகிற வேளையில் அய்யா என்னுடன் இல்லையே என்ற வேதனை ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது.

"அண்ணே! சுண்டல் வேணுமா???" என்ற குரல் கிருஷ்ணாவை இன்றைக்கு திரும்ப அழைத்தது.

தொடரும்.......



என்றும் அன்புடன்,
இராஜராஜன்

5 comments:

  1. Thala Expecting Part II. Part 1 is good............. But may i know there reason for you to create the blog suddenly. Netru illatha maatram enna thala..........?


    Regards
    Karthik R

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ராஜா, என்ன திடீர்னு இந்தப்பக்கம்..?

    கதை நல்லாருக்கு. ஆனா, எழுத்துப்பிழை இருக்கு..

    //.. தவல்ந்தபோதும், ஏழுதி, கஷ்ட்டபட்டுதான் ..//

    Keep rocking..

    ReplyDelete
  4. Hi Raja... eppadiyo kashta pattu kashta pattu tamil padichitten!! kadhai nall irukku.,..
    Abdul Kalam kadhai madhairi irukku?/

    anyways gud... waiting for second part...good job..

    ReplyDelete
  5. Mapie, Became a writer? Anyways, All the best. ;) It's nice da. Continue with your Part 2 release da.

    ReplyDelete